நாடோடிகள்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியீடு

205
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. நட்பின் மகத்துவத்தை பேசியதால் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்றது. தமிழில் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆகி அங்கேயும் பெரும் வெற்றிப் பெற்றது.
தற்போது தமிழ் சினிமாவில் வெற்றிப்படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கும் ஜூரம் ஆக்கிரமித்துள்ளது. இதில் நாடோடிகள் படமும் தப்பவில்லை. சமுத்திரகனி தன்னுடைய ஆஸ்தான ஹீரோவான சசிக்குமார் வைத்து `நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை வேகமாக முடித்து விட்டார்.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட  நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. முக்கிய வேடத்தில் இயக்குநர் சமுத்திரகனியும் நடிக்கிறார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை செய்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டரை  நடிகர் சூர்யா வெளியிட உள்ளார்.

படம் வருகிற ஆகஸ்ட் இறுதியில் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE