பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான வழிவகைகள் என்ன என்பதை மக்கள் மத்தியில் அறிவுறுத்தல் செய்யப்பட வேண்டும், இல்லையேல் ஆபத்து.

வடகிழக்கைப் பொறுத்தவரையில் யுத்தம் முடிந்து 10ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் குறிப்பாக தமிழ் சமுதாயத்தைக் குறிவைத்து தமிழ் முஸ்லிம், சிங்கள முஸ்லிம் இளைஞர்கள் போதைப் பாவணையில் ஈடுபட்டு தமிழ் மக்களுக்கும் அதனைக் கொடுத்து பாலியல் ரீதியிலான உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்திலும:; ஆயுதப் போராட்டக் கலாச்சாரத்தை மறந்து இவர்கள் வாழவேண்டும் என்பதிலும் குறியாக இருக்கின்றார்கள்.
திருமணம் முடிப்பதாகக் கூறி அப்பாவித் தம்ழ்ப் பெண்களை ஏமாற்றி அவர்களுக்கு வயிற்றில் குழந்தையையும் கொடுத்து விட்டு தலைமறைவாகின்ற நிலைமை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலைமையைத் தொடர்ந்தும் அனுபவிப்போமாகவிருந்தால் தமிழ் கலைகலாசாரம் என்பது குழிதோண்டிப் புதைக்கப்படும் ஒரு சூழல் உருவாகும.;
இதை விடவும் அவின,; கஞ்சா, லேகியம், பாலியல் உணர்வுகளைத் தூண்டக்கூடிய மருந்து வகைகள் வடக்குக் கிழக்கில் வாழும் இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு அவர்கள் அதற்கு அடிமையாகிய பின்னர் அவர்களாகவே வாங்கத் தூண்டும் அளவிற்கு நிலைமை மாற்றப்படுகின்றது. இதற்கு சட்டம் தகுந்த நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.
முஸ்லிம், தமிழ் பெண்களும் குடுவிற்கு அடிமையாகி விடுகின்ற சூழ்நிலையை சிங்கள இனத்தவர்கள் யுத்தத்திற்குப் பின்னர் இங்கு ஏற்படுத்தி விட்டனர். இதனைத் தடுத்து நிறுத்தவில்லை என்கின்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. இது தொடரட்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
யுத்தத்தின் முன்னும் பின்னும் சிங்கள ஏஜென்டுகளால் தமிழ்ப் பெண்கள் ஏமாற்றப்பட்டு மலேசிய, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு விலைமாதர்களாக பெண்கள் விற்கப்பட்டதும் நாம் அறிந்ததே. மலேசியாவில் பிரிக்(க)பீல், லிற்றிலின்டியா, பெனடிக், ஜக்குவார் போன்ற இடங்களில் 1000ற்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம் பெண்கள் விபச்சார விடுதிகளில் பணிபுரிந்து வருகின்றார்கள்.
இது தொடர்பாக எமது தினப்புயல் நிறுவனம் நேரடியாகச் சென்று பார்வையிட்டது. இது தொடர்பில் இவர்களது வாழ்க்கை அவலங்களை விசாரித்த பொழுது ஒரு சிலர் இராணுவத்தினரின் துன்புறுத்தல்களினாலும், ஒரு சிலர் வெளிநாடுகளுக்கு தம்மை அனுப்புவதாகக் கூறி ஏமாற்றியதாகவும், ஒருசிலர் வேலைக்கு என்று கூறி தம்மை தம்மை இங்கே மசாஜ் நிலையங்களிலும் விபச்சார விடுதிகளிலும் வேலைக்கமர்த்தி போதைப் பொருட்களையும் பாலியல் உணர்வுகனைத்தூண்டும் மாத்திரைகளையும் பலவந்தமாகத் தமக்கு அழித்து தற்போது தம்மால் அவையின்றி இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினர். மேலும் தற்போது தாம் விரும்பியோ, விரும்பாதோ இதனைப் புரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறினர்.
அரசியல் வாதிகளிடம் வேலைகேட்டுச் சென்றால் ஆயிரம் கேள்விகளைக் கேட்கின்றார்கள். எமக்கான வேலை வாய்ப்புக்களை அவரகளால் பெற்றுத்தர இயலவில்லை.
இலங்கையில் மட்டும் ஒருநாளைக்குப் பாலியல் தொந்தரவு முறைப்பாடாக சராசரி 25 முறைப்பாடுகளென ஒரு வருடத்தில் 9,125 முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து வருகின்ற உல்லாசப் பயணிகளும் இதில் உள்ளடக்கப்படுகின்றனர். கொழும்பை அண்டிய பகுதிகளில் விபச்சார விடுதிகளை நடாத்தி வட கிழக்குப் பகுதியிலுள்ளப் பெண்களை அங்கு கொண்டு சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்கின்றனர். கொழும்பு புறநகர்ப் பகுதியில் மட்டும் 45 விபச்சார விடுதிகள் இனங்காணப் பட்டுள்ளன. அதிலும் மறைமுகமாக இன்னும் எத்தனை உண்டு என்பது இனங்காணப் படவில்லை.
தேசியத்தலைவர் பிரபாகரனுடைய ஆட்சிக் காலகட்டத்தில் 2006இல் வன்னிப் பகுதியில் 6வயது சிறுமியை 67 வயது நபரொருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய போது அதனை விசாரித்த தேசியத் தலைவர் பிரபாகரன் குறித்த நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டதைக் கண்டித்து, அவருக்கு மரணதண்டனை வழங்குமாறு நீதித்துறையிற்குக் கட்டளை விடுத்தார். உடனடியாக அது நிறைவேற்றப்பட்டது. எனவே, அது போன்று பாலியல் துஸ்பிரபோகங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்ற பொழுது குறித்த சம்பவங்கள் நிறுத்தப்படுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன.
ஏஜென்டுகளாகப் பணிபுரிகின்றவர்கள் தான் கூடுதலாகப் பெண்களை ஏமாற்றுகின்றனர். இவர்களது ஆசைவார்த்தைகளுக்கு மயங்கிய பெண்கள் நம்பிக்கையோடு செயற்படுகின்ற பொழுதுகடைசியில் அவர்களையே ஏமாற்றி அவர்டகளிடம் கப்பம் கூறும் செயற்பாடுகளிலே; ஈடுபடுகின்றார்கள். இல்லாத இடத்தில் அவர்களது நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை அவமானப் படுத்துகிறார்கள். சமுதாயத்தில் இவர்களை விபச்சாரி என்றழைக்கும் நிலைக்கு இவர்களைத் தள்ளிவிடுகிறார்கள். இதற்கான மாற்று நடவடிக்கைகளை அரசாங்கம் உடன் முன்னெடுக்க வேண்டும்.
வவுனியாவில் கடந்தமாதம் மோனிசாவின் மகனை கடத்திய சம்பவம் இத்தகைய ஏஜென்டுகளாலேயே செய்யப்பட்டதொரு விடயமாகும். தற்பொழுது பாலியல் வியாபார சந்தைகளில் இவரது படங்கள் உலாவுவதும் கூட எம்முடைய தமிழ் கலாசாரத்தையே சீரழிக்கின்றன.
எனவே பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சங்கங்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு நீதியை நிலைநாட்டும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.
2009 களின் பின்னர் 21 பாலியல் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது. இதில் வித்தியாவினது சம்பவத்திற்கு மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாலியல் துஸ்பிரயோகங்களிலிருந்து பெண்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொள்வது அவர்களுக்கு உறுதுணையாக அமையும்.
பெண்கள் பாதுகாப்புச் சட்டம்
வன்முறை
இவ்வுலகிலே சீரும், சிறப்பும் வாய்ந்தவர்கள் யாரென்று கேட்டால், அனைவருமே நம்மைப் பெற்றெடுத்த தாய்மார்களைத்தான் கூறுவோம். தாய்மை என்பது பெண்களுக்கே உரிய தனிச்சிறப்பு. மனித குலத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தில் சமூகத்தை வழிநடத்தியவர்கள் பெண்கள்தான். அந்த பெண்வழி சமூகத்தில்தான் இன்றைய பெண்கடவுள்கள் தோன்றின.
கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதரின் வெற்றிக்குப் பின்புலத்திலும் பெண்ணின் பங்கு உண்டு என்பது உலகறிந்த உண்மை. சமூகத்திலே பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள் பெண்கள் என்பதற்கு எவ்வித ஐயமுமில்லை. இவ்வாறு வளர்ச்சிப் பாதையில் சமுதாயத்தை இட்டுச் செல்லும் பெண்கள் பாதுகாப்போடு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.
ஆனால், நடைமுறையில் நாம் காண்பதோ நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. சீரும், சிறப்போடும் நடத்தப்பட வேண்டிய பெண்கள் பல்வேறு வகையான வன்முறைகளுக்கு இலக்காவது கொடுமையானது. ஆணாதிக்க சமூக கட்டமைப்புகளில் சிக்கி, ஆண்களின் ஆதிக்க சூழ்ச்சிகளால் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். இவ்வுலகிலே ஏற்படும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண் களும், குழந்தைகளுமே. பெண்களின் நிலையை சற்று ஆராய்ந்து பார்த்தால் எந்த அளவுக்கு அவர்கள் சமுதாயத்திலே பல வகையான வன்முறைகளால் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரியும். 15 முதல் 45 வயதான பெண்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏதாவது ஒரு வகையான வன்முறைக்கு ஆளாகுகின்றனர். ஒட்டு மொத்த பெண்களில் 35% பேர் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். திருமணமான பெண்களில் 46% பேர் பல்வேறு வகையான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வைத் தொடருகின்றனர்.
ஆணாதிக்கம்
பெண்கள் கல்வி கற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும், அந்த துறைகளில் உள்ள பெண்கள் பாதுகாப்போடு பணி செய்ய முடிகிறதா என்றால் அது ஒரு பெரிய கேள்விக்குறிதான். பெரும் பாலான துறைகள் ஆண்களால் நடத்தப் படுவதாலும் பெரும்பான்மையான உயர் அதிகாரிகள் ஆண்களாக இருப்பதாலும் பெண்கள் எவ்வளவுதான் கல்வி கற்றிருந்தவர்களாக இருந்தாலும் அந்த துறைகளில் ஆணாதிக்கத்தின் கீழ் அடிமைகளாகவே உள்ளனர்.
நகர்புறங்களில் பல கம்பெனிகளிலும், தொழிற்சாலைகளிலும், தொலைக்காட்சி நிறுவனங்களிலும், ஊடகங்களிலும் பணி புரியும் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் பல வகையான பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் கிராமப் புறங்களில் வாழும் பெண்கள் பாதுகாப்பின்றி அதிகளவில் வாழ்க்கையை தொடருகின்றனர்.
பெண்கள் பாதுகாப்புச் சட்டம்
இவ்வாறு பாதுகாப்பின்றி வாழ்க் கையைத் தொடரும் பெண்களின் வாழ்வில் பாதுகாப்பு கிடைக்குமா? என்று எத்தனையோ பெண்களும், பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஆர்வாளர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களின் பல ஆண்டுகள் கனவை நிறைவேற்ற பெண்கள் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது. இந்திய அரசியல் அமைப்புச்சட்டப் பிரிவுகள் 14 மற்றும் 15 இரண்டும், எல்லா வகையான வேறுபாடுகளையும் களைந்து, சமத்துவத்தோடும் சகோதரத்துவத்தோடும் வாழ்வதற்கான உரிமையை வலியுறுத்திக் கூறுகிறது. பிரிவு 21-ல் பெண்கள் எவ்வாறு மாண்போடும், சமமான வகையில் பொது இடங்களிலும் பணியிடங்களிலும் மதித்து நடத்தப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஆனால் நடைமுறையில் நாம் காண்பதோ பெண்களின் பாதுகாப்பற்ற நிலை. இந்நிலை இந்தியாவில் மிகவும் உயர்ந்துள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாக கண்டித்து பெண்கள் பாதுகாப்பினை வலியுறுத்தியது.
1993-ல் வியான்னாவில் நடந்த “”உலக மனித உரிமை மாநாட்டில்” பெண்களின் உரிமைகளை மீறுதல் மிகக் கொடிய மனித உரிமை மீறல் என்பதைச் சுட்டிக்காட்டப்பட்டது. பெண்கள் பாதுகாப்புச் சட்டம் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பினை வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே, பணி இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவதே ஆகும். அரசின் இந்த அரிய சட்ட முயற்சி பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகுந்த பயனளிக்கும்.
இச்சட்டம் எல்லா இடங்களிலும் பணி செய்யும் பெண்களுக்கு பொருத்தமானதாக உள்ளது. அரசுத்துறையாகவோ, தனியார் துறையாகவோ, வேறு எந்த நிறுவனங்களாக இருந்தாலோ அங்கு பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்பட்டால் இச்சட்டம் மூலம் நீதி பெறலாம். மேலும், பாலியல் வன்முறைக் குத் தூண்டிய அதிகாரிகளையோ, ஏனைய ஆண்களையோ, சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து தண்டிக்கலாம். வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பட்டால், பெண்கள் பல பணிகளில் பங்கெடுத்து நாட்டின் ஒட்டு மொத்த சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்யலாம். இந்த பாதுகாப்புச் சட்டம் “பாலியல் வன்முறை’ என்றால் என்ன என்ற தெளிவான விளக்கத்தையும் வழங்குகிறது. “பெண்கள் பணி செய்ய உகந்த சூழலை ஏற்படுத்தி தராத நிலையே பாலியல் வன்முறை, என்பதை வலியுறுத்தி, அத்தகைய செயல்களை அறவே தடைசெய்ய முயற்சிக்கிறது. பலதுறைகளில் பணி செய்யும் பெண்களுக்கு மட்டுமல்ல இச்சட்டம். ஒரு நிறுவனத்திற்கு வந்துபோகும் பெண்களாக இருந்தாலும், படிக்கின்ற பெண்கள், பள்ளி, கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி செய்வோர், மருத்துவமனைகளில் நோயுற்றிருப்போர் முழுமை யான பாதுகாப்பினை வழங்க முற்படுகிறது. இச் சட்டத்தின் கீழ் ஒவ்வோர் அமைப்பிலும் உள்ளார்ந்த புகார் குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் புகார் செய்ய பரிந்துரைக்கப்படுகிறதுபெண்களின் பாதுகாப்பு கருதி, அவர்களின் பணி இடங்களில் தேவையற்ற வன்முறைச் செயல்களை ஒழிக்கும் முயற்சியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இச்சட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.
பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை மீறல்கள் அனைத்தும் மனித உரிமை மீறல்களே. அத்தகைய மனித உரிமை மீறலை செய்யும் நபர் யாராக இருந்தாலும் எந்த பதவியிலிருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கு மிகவும் உதவி செய்திடும் வகையில் இச்சட்டம் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. சரியான வகைகளில் தாமதமின்றி இச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால், கண்டிப்பாக தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். நாட்டின் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமெனில் வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.