இந்தியாவில் இருந்து தபால் மூலம் ஹெரோய்ன் கடத்தல்

145

இந்தியாவில் இருந்து தபால் ஊடாக இலங்கைக்கு ஹெரோய்ன் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் இலங்கை சுங்கப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 227 கிராம் ஹெரோய்ன் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.

குறித்த ஹெரோய்ன் போதைப் பொருளை நாட்டுக்கு கொண்டு வந்த நபர் உட்பட மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தல் சிறைச்சாலையில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.

SHARE