
வீட்டில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 8 மாத ஆண் குழந்தை ஒன்றினை வேன் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். வவுனியா, குட்செட் வீதி, முதலாம் ஒழுங்கையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை லண்டனில் உள்ள கணவனே இந்த கடத்தலை மேற்கொண்டதாக தாயார் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, குட்செட் வீதி, முதலாம் ஒழுங்கையில் வசித்து வரும் 22 வயதுடைய யுவதி ஒருவர் லண்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இந்தியா சென்று திருமணம் செய்துள்ளார்.
கணவன் லண்டன் சென்றதும் குறித்த யுவதி வவுனியாவில் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
இந்நிலையில் கணவன் ஏற்கனவே திருமணம் செய்தவர் என்பது தெரியவந்ததன் காரணமாக இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு கடந்த 5 மாதங்களாக குறித்த யுவதி கணவனுடனான தொடர்பை துண்டித்துள்ளார்.
இதன்போது கணவன் தனது குழந்தையை தருமாறு மிரட்டியதுடன், குழந்தையை கடத்துவேன் எனவும் தொலைபேசியில் மிரட்டியுள்ளதாக பொலிஸில் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிகாலையில் தாயாருடன் குழந்தை உறங்கிக் கொண்டிருந்த போது வான் ஒன்றில் வந்த 6 இற்கும் மேற்பட்டோர் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்றுள்ளனர்.
குழந்தை கடத்தப்பட்டு சிறிது நேரத்தில் லண்டனில் உள்ள கணவன் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியிருந்தார். இதனால் இந்தக் கடத்தல் தனது கணவனால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
8 மாத ஆண் குழந்தையான வானிஷன் எனும் குழந்தையே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் வவுனியா பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா குட்செட் வீதியில் மர்ம கும்பல் ஒன்றினால் நேற்று- 31.05.2018- அதிகாலை முகத்தை கறுப்பு துணியால் மூடிக்கட்டியபடி வந்த மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, 08 மாத குழந்தையை கடத்திச் சென்றனர். சினிமா பாணியில் இந்த கடத்தல் நடந்தது.
குழந்தை இன்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கடத்தல் ஏன் நடந்தது? இதன் பின்னணி என்ன? ஒரு அதிர்ச்சிகதையே பின்னணியில் இருப்பது தெரிந்தது….
கடத்தப்பட்ட எட்டு மாத குழந்தையான வானிஷனின் தாய், தந்தைக்கிடையில் இருந்த குடும்ப சிக்கலே இந்த கடத்தல் நடக்க காரணமாக இருந்துள்ளது.
கடத்தப்பட்ட குழந்தையின் தாய் மோனிஷாவும், தந்தை வசுதரனும் முரண்பாடு காரணமாக தற்போது சுமுகமற்ற உறவில் உள்ளனர். அவர்களிற்கிடையில் என்ன பிரச்சனை???
2013ஆம் ஆண்டு மோனிஷா 17 வயதாக இருந்த போது, பிரித்தானியா செல்வதற்கு முயற்சித்தார். அங்குள்ள அவரது உறவினர்கள் மூலமே இந்த ஏற்பாடு நடந்தது.
இந்த சமயத்தில், இலண்டனில் இருந்த ஆசைப்பிள்ளை வசுதரன் என்பவனின் உதவியையும் நாடியுள்ளார் மோனிஷாவின் உறவினர். வசுதரனின் மகள் என கூறி, பிரித்தானியாவிற்கு அழைப்பதற்கான முயற்சிகள் நடந்தன.
இதற்காக மோனிஷாவை இந்தியாவிற்கு அழைத்தார் வசுதரன். அங்கிருந்து தான் சுலபமாக விசா பெற்று செல்லாமென கூறினார்.
தனது மூத்த சகோதரியுடன் இந்தியாவிற்கு கிளம்பி சென்றார் மோனிஷா. வசுதரனும் இந்தியா வந்தார். அங்கிருந்து பிரித்தானியா செல்வதற்கு முயற்சிகள் நடந்த போது, அவர்கள் இந்தியாவில் சில காலம் தங்கியிருந்தனர்.
இந்தியாவில் தங்கியிருந்த போது, வசுதரனிற்கும்- மோனிஷாவிற்குமிடையில் நெருக்கம் ஏற்பட்டு, அது காதலானது.
மோனிஷா அப்பொழுது 17வயதானவர். வசுதரனுக்கு அவரைவிட 20 வயது அதிகம்.
பின்னர், மோனிஷாவின் பிரித்தானிய பயண திட்டம் சரிவரவில்லை. அதனால் சில காலத்திலேயே மீண்டும் சகோதரியுடன் வவுனியாவிற்கு திரும்பி வந்தார்.
மோனிஷா வவுனியாவிற்கு சென்றாலும், அவரை விடாமல் துரத்தி காதலித்தான் வசுதரன். அடிக்கடி தொலைபேசியில் தொடர்பேற்படுத்தி காதலை வளர்த்தான். காதல் வளர்ந்தது.
இந்த இரகசிய காதலை எப்படியோ மோப்பம் பிடித்த மோனிஷாவின் பெற்றோர், மோனிஷாவை கண்டித்து, அவரை . அந்த காதலிற்கு தடை விதித்தனர்.
அப்போது வசுதரனை உயிருக்குஉயிராக காதலித்து வந்தார் மோனிஷா. அதனால் பெற்றோரின் கட்டுப்பாட்டை அவரால் ஏற்க முடியவில்லை. எப்படியோ, வீட்டுக்கு தெரியாமல் வசுதரனிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி, தனது நிலைமை கூறியிருக்கிறார்.
வசுதரனின் ஏற்பாட்டின்படி, குடும்பத்தினர் சித்திரவதை செய்கிறார்கள் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார் மோனிஷா. அத்துடன், யாழ்ப்பாணம் உரும்பிராயில் வீடொன்றை ஏற்பாடு செய்து, மோனிஷாவை அங்கு தங்க வைத்தார்.
வயதுக்கோளாறில் வசுதரனின் பேச்சை கேட்டு, தன்னை ஆளாக்கிய தாய், சகோதரி, சகோதரனை பிரிந்து யாழ்ப்பாணம் வந்தார். உரும்பிராயில் மோனிஷா தங்கியிருந்த போது, தேவையான பணத்தை வசுதரன் அனுப்பியுள்ளான்.
இப்படியே இருந்தால் எப்படி என யோசித்த வசுதரன், 2015 இல் மோனிஷாவை இந்தியாவிற்கு அழைத்து தாலி கட்டி, மனைவியாக்கினான். திருமணத்தின் பின்னர் பல தடவைகள் பிரித்தானியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த வசுதரன், மோனிஷாவையும் அங்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளான். இதனால் மோனிஷா கர்ப்பம் தரித்தார்.
மோனிஷா கர்ப்பவதியானதும், அவரது பெற்றோருடன் சுமுகமான உறவு ஏற்பட்டது. அனைவரும் வவுனியாவில் ஒன்றாக இருப்பதென முடிவெடுத்து, வீடொன்றை வாடகைக்கு பெற்று வசித்தனர். 2017 ஒக்ரோபரில் மோனிஷா “வானிஷனை” பெற்றெடுத்தார்.
வானிஷன் பிறந்த சில மாதங்களில் தான் வசுதரனின் மன்மத வித்தைகளை அவர்(மோனிஷா) அறிந்தார். வசுதரனிற்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்துள்ளது, ஒரு மனைவி பிரித்தானியாவில், ஒரு மனைவி யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள். மோனிஷாவை விட 5 வயது குறைவான பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இதனால் விரக்தியடைந்த மோனிஷா, வசுதரனுடன் கடுமையான சண்டை பிடித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையில் முரண்பாடு உருவானது.
இதன்பின் சிறிதுகாலம் கழித்து, மீண்டும் மோனிஷாவிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி வானிஷனை தனக்கு காட்டுமாறு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். முன்னர் செய்த இரண்டு திருமணங்களை மறைத்ததால் பிள்ளையை காட்ட மறுத்து வந்தார் மோனிஷா .
மோனிஷாவை பழிவாங்கும் நோக்கத்துடன், வவுனியாவுடன் தொடர்புடைய முகப்புத்தகக பக்கமொன்றை உருவாக்கிய வசுதரன், மோனிஷாவுடன் எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்களில் தனது படங்களை மறைத்து விட்டு வெளியிட ஆரம்பித்தார். இந்தபடங்களை மேலும் சில இணையத்தளங்களில் வெளியிட முயன்றும் வந்தார்.
அதுமட்டுமல்லாமல், திருகோணமலையை சேர்ந்த தனது இரண்டு நண்பர்களை அனுப்பி, ‘பிள்ளையை விரைவில் தூக்குவோம்’ என்று அச்சுறுத்தியுள்ளார். அத்துடன், தனது மூத்த சகோதரியின் மகனையும் வசுதரன் அனுப்பி அச்சுறுத்தியுள்ளார்.
இந்த சமயத்தில் மோனிஷா குடும்பம் வசித்த வாடகை வீட்டில் திருத்த வேலைகள் செய்ய வீட்டின் உரிமையாளர் தீர்மானித்திருந்தார். அதனால் அதேகாணியில்- அந்த வீட்டிற்கு பின்புறமிருந்த வீட்டில்- அவர்களை தங்க வைத்தார்.
இந்த நிலையில் 31.05.2018 அன்று இரவு 2.05 மணியளவில் 22 தொடக்கம் 25 வயது மதிக்கத்தக்க மூவர் முகத்தை நன்றாக மறைத்தபடி மதில்பாய்ந்து வீட்டு வளவிற்குள் நுழைந்துள்ளனர். மோனிஷா குடும்பம் முன்னர் வாழ்ந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.
அந்த வீட்டில் வேலை செய்பவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். 52 வயதான ஒருவரை அழுத்திப் பிடித்து, அவரது கழுத்தில் கத்தியை வைத்து, பிள்ளை எங்கே என விசாரித்துள்ளனர். மற்றையவர்களை எழும்ப விடாமல் மரம் அரியும் வாளை வைத்து அச்சுறுத்தியுள்ளனர். அங்கு பிள்ளையில்லையென தெரிந்ததும், அந்த வீட்டிற்கு பின்புறம் இருந்த வீட்டுக்குள் நுழைந்தனர்.
வீட்டை பூட்டிவிட்டு மோனிஷா குடும்பம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த குண்டர்கள், 08 மாத குழந்தையான வானிஷனை தூக்கிக் கொண்டு தப்பியோடி சென்றனர். அவர்கள் முகத்தை மூடிக் கட்டியிருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.
இந்த சம்பவம் முடிந்து அதிகாலை 02.25 ஆன போது, வசுதரனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மோனிஷா அழுது கொண்டிருக்கும் சத்தத்தை கேட்ட பின்னர், தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டான்.
உடனடியாக பொலிசாரிற்கு தகவல் கொடுக்கப்பட்டு, பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தடயவியல் பொலிசாரும் பரிசோதனைகளை மேற்கொண்டனர். கடத்தல் தொடர்பாக பல கோணங்களில் விசாரணையை ஆரம்பித்துள்ள பொலிசார், வசுதரனின் சகோதரியின் மகனையும் விசாரணைக்கு உள்ளாக்கியிருந்தனர்.
இதன்பின்னர் வவுனியா பொலிசாருக்கு இலக்கத்தை மறைத்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பொன்றை வசுதரன் ஏற்படுத்தி பேசியுள்ளான். வானிஷனை நான்தான் கடத்தியுள்ளேன், மூன்று நாளின் பின் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதாகவும் கூறி, தொலைபேசியை துண்டித்துள்ளான்.
வவுனியா குட்சைட் வீதியில் நேற்று அதிகாலை 2மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களினால் கடத்திச் செல்லப்பட்ட கைக்குழந்தை பத்திராம இருப்பதாக வவுனியா பொலிசாருக்கு கைக்குழந்தையின் தந்தை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிசாரால் அழைக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று மாலை வெளிநாட்டிலுள்ள குழந்தையின் தந்தை வவுனியா பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கடத்திச் செல்லப்பட்டு கைக்குழந்தை பத்திராமக இருப்பதாகவும் அதனை ஒப்படைப்பதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் நடந்து முடிந்தவை இதனுடைய பின்னனி ஆராயப்பட வேண்டிய ஒன்று பெண்களால் பயித்தியமாண ஆனண்களும் ஆண்களால் பயித்தியமான பெண்களும் உண்டு 2013, 2014, 2015, 2016, 2017 ,2018 ,குழந்தை கடத்தப்படும் வரை சந்தோசமாக வாழ்த குடும்பத்தினுள் உள்நுழைந்து கூத்தாடி குடும்பம் பிரிய காரணத்தை மறுபக்கம் கண்டறிந்து நீதி நிலை நாட்டப்படுவதே எமது நோக்கம் கடத்தல் விடையம் தவறானது இக்கடத்தல் பின்னியும் எவ்வாறு நடந்தது என்பது தான் கவனிக்கப்படடேண்டிய ஒன்று
இப்படி எல்லாம் கெட்டப்பில செய்திகளை போட்டால் மக்களுக்கு வாசிக்கத் தூண்டும் உண்மையில் இந்த கதாநாயகன் வசுதரன் சுவிஸ்குமாரோ அல்லது பாலியல் படம்பிடித்து விற்பனை செய்பவர் அல்ல இவர் இரக்கப்பட்ட பெண்களுக்கு வாழ்வு கொடுப்பவர் பொலிசாரின் கண்கழுக்கு மண்னைத்தூவிய புத்திசாலி பிள்ளைப்பாசமே இவரை இப்படி நிலைக்கு தள்ளியது என்பதுதான் உண்மை வசுதரனின் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது பல ஊடகங்களும் இதனை கடத்தல் என்றே அவாதனித்து ஒன்றுக்கு முறனான செய்திகளை வெளியிட்டன உண்மையில் பிள்ளையை கொலைசெய்துவ விடுவோம் என்று பெண் வீட்டார் கூறியதற்கு அமைவாகவே பொலிசாரின் கண்கழுக்கு மண்னைத்தூவிய புத்திசாலி பிள்ளைப்பாசமே இவரை இப்படி நிலைக்கு தள்ளியது எனது பிள்ளைக்கு ஏதும் சம்பவித்து விடக்கூடாத என்று பிள்ளையை அழைத்துக்கொண்டு சென்றார்
கடந்த மாதம் வவுனியாவில் நடைப்பெற்ற கடத்திய குழந்தை சம்பவத்துக்கு பிராதான காரணம் கள்ளக் காதலே ஒப்புதல்வாக்கு ழூலத்தில் குழந்தையின் தகப்பன் வசுதரன்
கடந்த மாதம் வவுனியாவின் தோணிக்கல் பகுதியில் சிறுவன் கடத்தப்பட்ட விடயம் தொடர்பாக இலங்கையிலும் , சர்வதேசத்திலும் ஊடகங்களிலும் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது. இக் கடத்தல் சம்பவம் ஏன் எதற்காக மேற்க்கொள்ளப்பட்டது என்பதற்கான விசாரனைப்பகுதிகளை எந்த ஒரு ஊடகமும் வெளியிடவில்லை. ஊடகங்கள் நடுநிலையாக செயற்பட வேண்டும் என்ற வகையில் நாம் குறித்த கடத்தல் சம்பவத்தில் ஈடுப்பட்ட சூத்திரகாரியாக கருதப்படும் வசுதரன் அவர்களிடம் தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு கேட்ட போது பல அதிர்ச்சி காரமான சம்பவங்கள் அவருடைய ஒப்புதல் வாக்கு மூலத்தில் சமர்ப்பித்து உள்ளார்.
அதன் அடிப்படையில் நீங்கள் இந்தப் பிள்ளையை கடத்துவதற்கு முகாந்திரம் என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்த வசுதரன் அவர்கள்…….
குழந்தை பிறந்து 04மாதத்தில் எனது மனைவி மோனிஸா அவர்கள் குழந்தையை காட்ட முடியாது என கூறி கையடக்க தொலைப்பேசியை நிறுத்தி வைத்திருந்தார். அதற்கு பிறகு தொடர்புகளை மேற்க்கொண்ட போதும் எனது பேச்சுக்கு செவி சாய்ப்பதாக இல்லை.
மோனிஸாவின் தாயாரிடம் தொடர்புக் கொண்ட போது எக் காரணம் கொண்டும் பிள்ளையை காட்ட முடியாது என்று மறுபடியும் கூறியிருந்தனர். திரும்பவும் தொடர்பு கொள்வதற்காக நான் இலங்கையில் இருக்கும் பலரிடம் தொடர்புகளை மேற்க்கொண்டு இருந்தேன். இதுவும் கைக்கூடாமல் போனது. மீண்டும் அவரின் தாயாரிடம் பிள்ளையை கேட்ட போது காட்ட முடியாது. அவ்வாறு காட்டுவதாயின் எனக்கு 5இலட்சம் பணம் அனுப்பி வைக்குமாறு கூறிக்கொண்டதோடு மோனிஸாவுக்கு வேறு திருமணம் பேசிக்கொண்டு இருப்பதாகவும் எனக்கு கூறியிருந்தார். நானும் அதற்கு அமைவாக மோனிஸஸாவின் தாய்க்கு 5இலட்சம் பணம் அனுப்பி வைத்தேன். அதனைப் பெற்றுக் கொண்ட அவர் அவளை விட்டு விடு எனக்கூறினார். ஏன் அப்படி சொல்லுகின்றீர்கள் அவள் யாரை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாள் என நான் கேட்ட போது. அதற்கு அவள் யாரை திருமணம் செய்துக் கொண்டாள் உனக்கு என்ன? என்று கேட்டார்.
சரி எனக் கூறிவிட்டு எனது பிள்ளையை என்னிடம் பெற்று தருவதாக கூறி அவரே இப்படி ஒரு முறையில் பிள்ளையைக் கொண்டு செல்லுமாறு கூறியிருந்தார். அப்பொழுது நான் கேட்டேன் எவ்வாறு சாத்தியமாகும் என்று மோனிஸா பிள்ளையுடன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து நான் உன்னுடன் தொடர்புகளை மேற்க்கொள்கிறேன். அந்த நேரம் பார்த்து வந்து பிள்ளையை கொண்டு போகும் படி கூறியதற்கு அமைவாகவே நானும் பிள்ளையை கொண்டு சென்றேன். இதன் அடிப்படையில் தான் பிள்ளையை தூக்குவதற்காக ஆட்களுக்கு பணம் கொடுத்து அனுப்பி இருந்தேன். என்பது உண்மை. அதன் பின்னர் பிள்ளையை பாதுகாப்பாக குறித்த இடத்தில் வைத்துக் கொண்டு 03நாட்களுக்கு பின்னர் பிள்ளையை ஒப்படைப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தேன். அதற்கு பிறகு குறித்த கடத்தலை பொலிஸாருக்கு கூறியதும் நான் தான். நான் பிள்ளையைக் கொண்டு சென்றதற்கான முக்கிய நோக்கம் தவறான தாயுடன் எனது பிள்ளை வளரக்கூடாது என்பதற்காக தான். என்னால் என்னுடைய பிள்ளையின் முகத்தை பார்க்காமல் இருக்க முடியாது. தற்போது தாய் கூறும் காரணங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதற்கிடையில் ஊடகவியளார் குறுக்கிட்டு கேட்ட போது பால் குடிக்கும் அந்த குழந்தையை இவ்வாறான ஒரு பாணியில் கொண்டு சென்றது தவறு இல்லையா? என்று கேட்ட போது.
நிச்சயமாக தவறு ஆனால் வேறு வழியில்லை தப்பான ஒருவரிடம் எனது பிள்ளை இருக்கும் என்ற விடயத்தை உலகறிய செய்ய வேண்டும்.அவமானப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை கூடுதலான நேரம் தாய் பிள்ளையுடன் இருப்பதில்லை என்ற தகவலே எனக்கு அங்கிருந்து கிடைத்திருந்தது.அதைக் கேட்டு மனமுடைந்த நான் பிள்ளையை எப்படியாவது வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு முயற்சி செய்தேன். அது எனது பிள்ளை தான் மாற்றுக் கருத்து இல்லை. மோனிஸாவின் பிழையான நடத்தை காரணமாகவே அவளின் தாயாரே எனக்கு தகவலை அறிய தந்தார். அதற்கான ஆதார பூர்வமான ஒலிப்பதிவு என்னிடம் இருக்கின்றது. பிள்ளையை கடத்திய தாய் எவ்வாறு துடிப்பால் என்றும் எனக்கு தெரியும். இது தொடர்பில் என்னுடன் கூட தொலைப்பேசி எடுத்துப் பேசவில்லை. எனது பிள்ளையை என்னிடம் தாங்கள் என்றுக்கூட என்னிடம் கேட்கவில்லை. நான் தான் தொலைப்பேசி அழைப்பை மேற்க்கொண்டு இருந்தேன். எவ்வளவு தூரம் பிள்ளை மீது அக்கறை உடையவள் என்பதை இதில் இருந்து என்னால் புரிந்துக்கொள்ள முடிகியது.
பிள்ளையை கடத்திய விடயம் ஒரு பக்கம் இருக்க நீங்கள் ஏற்கனவே திருமணம் ஆகி 02பிள்ளைகளுக்கு தகப்பனாக இருக்கின்றீர்கள்.அப்படி இருக்க மோனிஸாவை எப்படி திருமணம் செய்துக் கொள்ள சம்மதித்து இருச்தீர்கள்.. இது தவறு இல்லையா?
எல்லா விடயங்களும் மோனிஸாவுக்கும் மோனிஸாவின் தாய்க்கும் அவரது அன்ரிக்கும் தெரியும் நான் 2006ஆம் ஆண்டே என் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டேன்.இவ் விவகாரம் இவர்களுக்கு நன்கு தெரியும். எனது மனைவியுடன் பேசுவதில்லை பிள்ளைகளுடன் பேசுகிறேன். அனைத்து பராமரிப்பு செலவுகளையும் நானே கொடுத்து வருகிறேன்.
மோனிஸாவை முதன் முதலாக நீங்கள் எங்கே சந்தித்தீர்கள்?
முதன் முதலாக 2013ஆம் ஆண்டு இந்தியாவில் சந்தித்து இருக்கின்றேன். வெளிநாடு ஒன்று செல்வதற்காக அங்கு வந்து இருந்தார்கள். குறித்த பெண்ணின் தாயார் தனது மகளை திருமணம் செய்யுமாறும். நீங்கள் நல்லவர் என கேள்விப்பட்டோம். உங்களது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாகவும் அறிந்திருக்கிறோம். பரவாயில்லை நீங்கள் எனது மகள் மோனிஸாவை திருமணம் செய்துக் கொள்ளுங்கள். என கூறியிருந்தார். இவ்வாறு இருக்கையில் இவர்களுக்கு காதல் மலர்ந்தது. வெளிநாட்டில் இருக்க கூடிய இவரது அத்தையே இவருக்கு தொலை தொடர்பு மேற்க்கொண்டு இந்தக் குடும்பத்தில் போய் மாட்டிராதே எனக் கூறியிருந்தார். பின்னர் அவரும் ஏதோ ஒரு வகையில் சம்மதித்தது அடிப்படையில் காதல் விவகாரம் வலுவடைந்து சென்றது. இதன் பிறகு 01மாத கால இடைவெளியில் மோனிஸாவை என்னுடன் இந்தியாவில் விட்டு விட்டு அவருடைய தாயார் இலங்கை வந்து விட்டார்.
மோனிஸா மீண்டும் சிறிது காலம் என்னுடன் தங்கி விட்டு இலங்கை வந்து விட்டார். 2014.07 மாதம் மீண்டும் இந்தியாவிற்கு வந்த மோனிஸா 02கிழமை என்னுடன் தங்கி விட்டு மீண்டும் அவர்கள் இலங்கை திரும்பி விட்டனர். இவளை நான் 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் திருமணம் செய்துக் கொண்டேன். அதுவும் முறைப்படியான பதிவுத் திருமணம் நடைப் பெறவில்லை. முறையாக திருமணம் பதிவு செய்துக் கொள்வதற்கான நடவடிக்கையும் மேற்க்கொண்டு இருந்தேன். காலங்கள் கடந்து சென்ற நிலையில் அதற்கான முன்னெடுப்புகளை மோனிஸா வீட்டாரும் மேற்க்கொண்டு இருக்கவில்லை.விடுமுறையிலயே லண்டனில் இருந்து இந்தியா வருவதன் காரணத்தால் பதிவு செய்வதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையவில்லை.
மோனிசாவால் எழுதப்பட்ட 5 பக்க கடிதம் அதில் தனது வாழ்க்கையில் மண் அள்ளிப்போட்டவர்களும் தனது வாழ்க்கையில் நடந்த அனைத்து விடையங்களும் பெரும் அதிர்வலைகளை மட்டுமல்ல குற்றவாளிகளை இலகுவில் கண்டு பிடிக்ககூடியவகையில் அமைந்திரப்பது ஆச்சரியமே’ ஊடக தர்மம் கருதி அதனை நாம் வெளியிடவில்லை மோனிசா இக்கடிதத்தை ஏன் எழுதினார்?
வாக்குழூலத்தில் வெளியாகும் பல உண்மைகள்
தெடரும்…………