தமிழ் சினிமாவில் பலராலும் மறக்க முடியாத ஒரு முகம் தான் ஸ்ரீதேவி. பிரபல நடிகர் விஜய குமாரின் மகளும், நடிகர் அருண் விஜய்யின் தங்கையுமான இவர் ரிக்ஷா மாமா படத்தில் குழந்தையாக சினிமாவில் இறங்கினார்.
பின் தமிழில் காதல் வைரஸ் படம் மூலம் அவர் ஹீரோயினாக எண்ட்ரி ஆனார். மாதவனுடன் பிரியமான தோழி, தனுஷுடன் தேவதையை கண்டேன் என சில படங்கள் இவருக்கு முக்கியமானதாக அமைந்தன.
அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. கடைசியாக கன்னடத்தில் 2006 ல் லக்ஷ்மணா படத்தில் நடித்தார். பின் அவர் 2009 தொழிலதிபர் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
பின் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு அவர்கள் ரூபிகா என பெயர் வைத்துள்ளனர். அக்குழந்தைக்கு நேற்று 2 வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.