கொழும்பை அண்டிய பகுதிகளில் நீர்வெட்டு

177
கொழும்பை அண்டிய பகுதிகளில் நாளை 9 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாளை 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 9 மணிமுதல் களனி பாலம் முதல் தெமட்டக்கொட வரையிலான பேஸ் லைன் வீதி மற்றும் அதன் கிளை வீதிகள்,கொழும்பு செட்டியார் வீதி மற்றும் அதன் கிளை வீதிகள் உட்பட கொழும்பு 13,14,15 ஆகிய பகுதிகளிலும் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

SHARE