இந்திய மாநில அணியில் இடம்பெற வேண்டுமென்றால் பெண்களை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கூறியதாக இந்திய உத்தரபிரதேச வீரர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேஷ் மாநில கிரிக்கெட் சங்கத்தில் முஹமது அக்ரம் சைபி எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாவிட்டாலும் இவர் அம்மாநில கிரிக்கெட் சங்கத்தில் செல்வாக்கு உள்ளவராகவே இருக்கிறார். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட் தலைவர் ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளராகவும் பி.சி.சி.ஐ.யில் சம்பளம் பெறும் பணியாளராகவும் இருக்கிறார்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா, தான் மாநில அணியில் விளையாட வேண்டுமானால் பெண்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என முஹமது அக்ரம் சைபி கேட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், ராகுல் சர்மாவிடம் முஹமது அக்ரம் சைபி
பணம் மற்றும் வேறு வகையான ஏற்பாடுகளை செய்யக் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது கிரிக்கெட் உலகில் புயலைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக, இந்தியத் தொலைக்காட்சியொன்று ஒலி நாடா ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், குறிப்பிட்ட நபர் உள்நோக்கத்துடன் ராகுல் சர்மாவிடம் மாநில அணியில் விளையாட விருப்பம் என்றால் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு பெண்களை அனுப்பு என்று கேட்கிறார். இந்த ஒலிநாடா பெரும் சர்ச்சைப் புயலை ஏற்படுத்தியுள்ளது.