மலேசியாவின் கோலாலம்பூருக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர்

227

அமைச்சர் றிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை மலேசியாவின் கோலாலம்பூருக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது கோலாலம்பூரில் மலேசிய இஸ்லாம் சே கட்சியின் தலைவர் டட்டோ சிறீ துவான் குரு ஹாஜி அப்துல் ஹாதி பின் அவாங் தலைமையில் கோலாலம்பூர் ஜலான் ரஜா லோட் இல் ஆரம்பமாகும் உயர்மட்ட மாநாடு ஒன்றில் அமைச்சர் கலந்து கொள்ள வுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து கோலாலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறும் Global Leadership Award 2018 நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார்.

அத்துடன், நாளை காலை மலேசியாவின் சர்வதேச வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் வை.பி.இக்னேசஸ் டெரல் லீக்கிங்ற்கும், அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது, மலேசியாவுக்கும் – இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர நட்புறவு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

SHARE