அட்டன் ரொத்தஸ் பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுவனின் சடலம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

143

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொத்தஸ் பகுதியில் நான்கு வயது சிறுவன் ஆற்றில் கிடந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அட்டன் ரொத்தஸ் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் சபீத் எனும் குறித்த சிறுவன் நேற்று மாலை 5 மணியளவில் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் ஆற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிறுவன் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த வேளையில், அருகில் இருந்த ஆற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சிறுவனை தேடும் பொழுது சிறுவனின் செருப்பு ஆற்றுக்கு அருகில் இருந்ததை கண்டு ஆற்றுப்பகுதியில் சுமார் 100 மீற்றர் தூரத்தில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

SHARE