கொழும்பு தமிழ் சங்கத்தில் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

195
(பா.திருஞானம்) 
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் இலண்டன் பல்கலைகழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றமைக்காகவும் அரசியலில் 30 வருட அனுபவத்தையும் அகவை 66  கானும்  கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் 03.09.2018 நடைபெற்றது.
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளையின் துணைத்தவைவர் கே.செந்தில்வேலவர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன். சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் உலக தழிழ் பண்பாடடு இயக்க சர்வதேச கிளைகளுக்கான ஒருங்கிணைப்பபளர் மற்றும் ஜெர்மன் நாட்டு கிளை தலைவர் இ.இராஜசூரிய மற்றும் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் கல்வி அமைச்சின் முன்னால் மேலதிக செயலாளர் எஸ்.தில்லை நடராஜா கல்வி அமைச்சின் அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்ட பணிப்பாளர் கந்தையா பத்மநாதன் மீன் பிடிதுறை மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார் வைத்திய கலாநிதி கவிஞர்  அல்காஜ் ஜின்னாஹ் ~ரிபுத்தீன் உட்பட  கொழும்பு வாழ் நகர வர்த்தகர்கள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இலங்கை இந்து குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ.கு.வை.க.வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின் ஆசிர்வாத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழ் தாய் வாழத்து, வாழ்த்துரைகள் பிரதம அதிதி உரை கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிப்பு நடைபெற்றது. தொடர்ந்து இராஜாங்க அமைச்சரின் ஏற்புரையுடன் நன்றி கூறி விழா இனிதே நிறைவடைந்தது.
SHARE