மஹிந்த ராஜபக்ஷ “இலங்கை யின் முன்னாள் ஜனாதிபதி என்பது டன், எதிர்கால ஜனாதிபதியாக வரவுள்ளவர்” என்று இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் புதுடில்லி விஜயம் குறித்து அவர், தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள் ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், அடுத்த ஜனாதிபதியாகவும் வர உள்ளவர், விராட் இந்துஸ்தான் சங்கம் நடத்தும் நிகழ்வில் கலந்துகொள்ள புதுடில்லி வந்துள்ளார். நாளை பொதுக்கூட்டத்தில் உரை யாற்றவுள்ளார்” என அவர் குறிப் பிட்டுள்ளார்.