அமைச்­ச­ரவையின் மோசடி தொடர்பான முக்கிய அமர்வில் பங்கேற்காத முதலமைச்சர் விக்கி!

151

வடமாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நேற்று நடைபெற்ற வடமாகாண சபையின் அமைச்­ச­ரவையின் மோசடி தொடர்பான முக்கிய சபை அமர்­வில் பங்குபற்றவில்லை என சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபை­யின் 132ஆவது அமர்வு நேற்று கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையில் இடம்­பெற்­றது.

சபை­யின் ஆரம்­பத்­தில் அவைத் தலை­வர் அறி­விப்­பின்­போது வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இன்று (நேற்று) மின்­னஞ்­சல் அனுப்­பி­ருந்­தார் என்­றும், அதில், இன்று (நேற்று) காலை ஒரு நிகழ்­வில் பங்­கேற்ற பின்­னர் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்­ல­வேண்­டி­யுள்­ளது என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

முடிந்­தால் மாலை அமர்­வில் பங்­கேற்­ப­தா­க­வும் மின்­னஞ்­ச­லில் தெரி­வித்­துள்­ள­தாக அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் சபைக்கு அறி­வித்­தார்.

நேற்றைய சபை அமர்­வில், வடக்கு அமைச்­ச­ரவை விவ­கா­ரம், பளைக் காற்­றாலை விவ­கா­ரம், கூட்­டு­றவு அமைச்­சின் கீழான மோசடி உள்­ளிட்ட முக்கிய விட­யங்­கள் ஆரா­யப்­பட்­டன.

சபை அமர்வு பி.ப. 1.30 மணிக்கு நிறை­வ­டை­யும் வரை­யில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் சபைக்கு வருகைதரவில்லை.

SHARE