வவுனியா பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் பலர் சிக்கினர்

121

வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் நேற்று  மாலை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 30க்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குருமன்காடு , வைரவபுளியங்குளம் , புகையிரத நிலைய வீதி , மாடசாமி கோவிலடி , யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே போன்ற பகுதிகளில் மாலை நேரங்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும்  இளைஞர்கள்  அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது , தலைக்கவசம் அணிவதில்லை , ஓர் மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது , அதிவேகமாக செல்வது தொடர்பாக பல முறைப்பாடுகள் பொதுமக்களினால் பொலிஸாருக்கு முன் வைக்கப்பட்டது.

இதனை கருத்தில் கொண்ட வவுனியா மாவட்ட போக்குவரத்து பிரிவு  3.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரை திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.குறித்த  திடீர் சோதனை நடவடிக்கையின் போது சுமார் 30க்கு மேற்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 12ம் திகதி வவுனியா யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 20க்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE