“சிறுவர் மன ஓவியங்கள்” சித்திரக் கண்காட்சி ஜனாதிபதி தலைமையில்

185

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “சிறுவர் மன ஓவியங்கள்” சித்திரக் கண்காட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு இலங்கை மன்றத்தில் ஆரம்பமானது.

கலைகளினூடாக சிறுவர்களின் மனதினை ஆற்றுப்படுத்தும் நோக்குடன் Art of Life சிறுவர் ஓவியப் பயிற்சி மன்றத்தினால் இந்த சித்திரக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், 03 முதல் 12  வயது வரையிலான சிறுவர்கள் இதில் பங்குபற்றினர்.

கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி சிறுவர், சிறுமியர்கள் மிகுந்த அன்புடன் வரவேற்றனர்.

சிறுவர் மன ஓவியங்கள் நினைவு மலர் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், விசேட திறமைகளை வெளிக்காட்டிய சிறார்களுக்கு ஜனாதிபதி பரிசில்களை வழங்கினார்.

இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடும் திசினி சமந்தா லியனகே என்ற சிறுமிக்கு ஜனாதிபதி மரக்கன்று ஒன்றினை வழங்கினார்.

பிரபல ஓவியக் கலைஞர் திலக் கலுலியனகே உள்ளிட்ட Art of Life சிறுவர் ஓவியப் பயிற்சி மன்றத்தின் சிறார்களால் வரையப்பட்ட ஜனாதிபதியின் உருவப்படமும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

பிரபல கலைஞர் சதிஸ்சந்திர எதிரிசிங்ஹ, எட்வின் ஆரியதாச உள்ளிட்ட கலைஞர்களும் புத்திஜீவிகளும் அதிதிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

SHARE