இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட 8 தூத்துக்குடி மீனவர்களுக்கு ஐந்தாவது முறையாவும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்களை நேற்றயை தினம் புத்தளம் மாவட்ட சுற்றுலா நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதிவான் அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து எட்டு மீனவர்களும் புத்தளம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.