மீண்டும் கொள்ளைக்கும்பல்களிடம் ஆட்சியை கையளிக்க முடியாது – அநுரகுமார

146

ஒரு கொள்­ளைக்­கார கும்­பலை விரட்­டி­விட்டு இன்­னொரு கொள்­ளைக்­கார கும்­பலை ஆட்­சிக்கு கொண்­டு­வந்­து­விட்டோம். மீண்டும் இரண்டில் ஒரு கொள்­ளைக்­கார கும்­ப­லுக்கு ஆட்­சியை கொடுக்க இட­ம­ளிக்க கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கருத்துக் கூறு­கையில்,

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­த­துடன் நாட்டு மக்­களின் வாழ்­வா­தாரம் உயர்­வ­டையும், நடுத்­தர மற்றும் கஷ்­டப்­படும் மக்­களின் பைகளில் பணம் நிறையும் என்ற வாக்­கு­று­தி­களை வழங்­கினர். நடந்து செல்­பவர் மோட்டார் சைக்கிள் வாங்­குவார், மோட்டார் சைக்­கிளில் செல்­ப­வர்கள் கார் வாங்­கு­வார்கள் என்ற கதை­களை அர­சாங்கம் கூறி­யது. ஆனால் இன்று நாட்டின் பொரு­ளா­தாரம் மிகவும் மோச­மான நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது.

கடந்த மூன்று ஆண்­டு­களில் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை முன்­னேற்ற எவ்­வா­றான கொள்­கையை கடைப்­பி­டிப்­பது என்­பது அர­சாங்­கத்­திற்கு தெரி­ய­வில்லை. ரூபாவின் வீழ்ச்­சியை கட்­டுப்­ப­டுத்த தெரி­ய­வில்லை, வாங்­கிய கடன்­களில் இருந்து நாட்­டினை மீட்­டெ­டுக்க தெரி­ய­வில்லை, மேலும் கடன்­களில் சிக்கும் பொரு­ளா­தார கொள்­கை­யையே கடைப்­பி­டித்து வரு­கின்­றனர். தேசிய வளங்­களை விற்றும், நாட்­டை குத்­த­கைக்கு கொடுத்தும் வரு­மானம் தேடிக்­கொள்ளும் நிலை­மையே இந்த அர­சாங்­கத்­திடம் உள்­ளது.

நாளுக்கு நாள் வாழ்­வா­தார சுமை கூடிக்­கொண்­டுள்­ளது. விலை உயர்ந்­து­கொண்டே செல்­கின்­றது. எண்ணெய் விலை உயர்­கின்­றது. இவற்றை கட்­டுப்­ப­டுத்த சிறந்த  திட்டம் ஒன்றை அர­சாங்கம் கையாள தெரி­யாது இருக்­கின்­றது.  ஆனால் அரச தலைவர்கள், அமைச்­சர்கள் தமது சுக­போக வாழ்க்­கையை விட்­டுக்­கொ­டுப்­ப­தாக இல்லை. மூவா­யிரம் இலட்சம் பெறு­ம­தியில் பிர­தமர்  சுக­போக கார் பயன்­ப­டுத்­து­கின்றார்.

ஜனா­தி­பதி பயன்­ப­டுத்தும்  வாக­னமும் அண்­ண­ள­வாக அவ்­வா­றான பெறு­ம­தியைக் கொண்­டுள்­ளது. அமைச்­சர்கள் பயன்­ப­டுத்தும் வாக­னங்­களும் 400 இலட்­சத்­துக்கும்  அதி­க­மான பெறு­ம­தியை கொண்­ட­வை­யாகும். முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் சுக­போக வாழ்க்­கையை வாழ்­வ­தாக கூறு­கின்­றனர்.  ஆனால் இவர்­களின் வெளி­நாட்டு பய­ணங்­க­ளுக்கும் அதி­க­ள­வி­லான செல­வுகள் ஏற்­ப­டு­கின்­றன. ஜனா­தி­ப­தியின் அமெ­ரிக்க விஜ­யத்தின் போது 63 க்கும் அதி­க­மான நபர்கள் அவ­ருடன் சென்­றுள்­ளனர். உற­வி­னர்கள், அதி­கா­ரிகள், அமைச்­சர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் என பலர் சென்­றுள்­ளனர். அவர்­க­ளுக்கு மிகவும் அதி­க­மான தொகையை செல­வ­ழித்­துள்­ளனர்.

ஒரு கொள்­ளைக்­கார கும்­பலை விரட்­டி­விட்டு இன்­னொரு கொள்­ளைக்­கார கும்­பலை ஆட்­சிக்கு கொண்­டு­வந்­து­விட்டோம். மீண்டும் இரண்டில் ஒரு கொள்­ளைக்­கார கும்­ப­லுக்கு ஆட்­சியை கொடுக்க இட­ம­ளிக்க கூடாது. இவர்கள் சகல சந்­தர்ப்­பங்­க­ளிலும் யுத்­தத்தை காரணம் காட்டி தப்­பித்­துக்­கொள்­கின்­றனர். யுத்தம் நில­விய காலத்தில் நாட்டின் அபி­வி­ருத்­தியின் பின்­ன­டை­வுக்கு யுத்தம் காரணம் எனக் கூறினர். யுத்தம் முடி­வுக்கு வந்து பத்து ஆண்­டு­களை நெருங்­கு­கின்ற நேரத்தில் இப்­போதும் அதே கார­ணத்தை கூறியே தப்­பித்­துக்­கொள்­கின்­றனர்.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பாளர் குறித்து எமக்கும் நம்­பிக்கை இருந்­தது. எனினும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக கொண்­டு­வர முழு­மை­யான உத­வி­களை செய்­தது மஹிந்த ராஜபக்ஷவே­யாகும். பாரா­ளு­மன்­றத்தில் 45 பேரைக் கொண்ட ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் எவ்­வாறு ரணிலை பிர­த­ம­ராக கொண்­டு­வர முடிந்­தது?  ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது வேட்­பா­ளரின் வெற்­றி­யுடன் மஹிந்த ராஜபக்ஷ மிகவும் அச்சத்துடன் இருந்தார். தமது குற்றங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தில் அவர் இருந்தார். 140 பேர் கொண்ட மஹிந்த அணியினர் ரணிலை பிரதமராக்கி தாம் தப்பித்துக்கொள்ள ரணிலுக்கு உதவி செய்தனர் என்பதே உண்மையாகும். ராஜபக் ஷ தப்பித்துக்கொள்ளவே ரணிலை பிரதமராக நியமித்தார். ரணில் விக்கிரமசிங்க அந்த நன்றிக்கடனை மிகச் சரியாக செய்துவருகின்றார்.

SHARE