வெளிநாட்டை காட்டி ஏமாற்றிய நபர்! இறுதியில் நேர்ந்த விபரீதம்

457

இஸ்ரேல் நாட்டில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த ஒருவரை, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கம்பளை – புஸ்ஸசல்லாவை பகுதியில் வைத்து இந்த சந்தேகநபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபரை கைது செய்யும் போது பணம் பெற்றுக் கொண்டமைக்காக அவரால் வழங்கப்பட்ட ஒப்பந்த பத்திரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது அவரை தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புஸ்ஸல்லாவை சேர்ந்த சஹாப்தீன் மொஹமட் நௌசாட் என்ற நபரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

SHARE