வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களின் குறித்தொதுக்கப்பட்டுள்ள 2018ம் ஆண்டுக்கான பிரமான அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து கந்தபுரம் கிராம அபிவித்திச்சங்கம், எல்லப்பர் மருதங்குளம், விவசாயக்கிராம கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் ஐம்பதுனாயிரம் ரூபா பெறுமதியான பிளாஸ்ரிக் கதிரை வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் 05.10.2018ம் திகதி மாவட்ட கிராமஅபிவிருத்தித் திணைக்களத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தித்திணைகளத்தின் மாவட்ட உத்தியோகத்தர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவர் செயலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.