இலங்கையில் மகிந்தஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட 33 ஊடகவியளலர்களுக்கு எந்த கண்டனமும் இல்லை ஆனால் பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்:-

431

 

 இலங்கையில் மகிந்தஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட 33 ஊடகவியளலர்களுக்கு
எந்த கன்டனமுக் இல்லை

ஆனால்

பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்

பிரான்ஸ் பரிஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கண்டனம் வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள பத்திரிகை நிறுவனமொன்றின் மீது இன்று தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சார்லீ ஹெப்டோ என்னும் மதாந்த சஞ்சிகையின் தலைமைக் காரியாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சகல விதமான பயங்கரவாதங்களுக்கு எதிராகவும் உலக சமூகம் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் யின் தலைவர் தொடர்பில் கேலிச்சித்திரமொன்று வெளியிடப்பட்டு சில மணித்தியாலங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரதம ஆசிரியர் உள்ளிட்ட ஒன்பது ஊடகவியலாளர்களும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

 

SHARE