மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான குடியேற்றவாசிகள் மெக்ஸிகோவின் தெற்கு எல்லையில் உள்ள நுழைவாயிலை உடைத்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றுள்ளனர்.
குவாட்டமாலா எல்லை தடுப்புக்களை உடைத்து நுழைந்த குடியேற்றவாசிகள், ராணுவம் இல்லாத பகுதியில் கலவர தடுப்பு பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
குடியேற்றவாசிகளை அமெரிக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்து வைத்தமைக்காக நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெக்ஸிகோவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
வன்முறை மற்றும் வறுமையால் தாங்கள் உயிர்த் தப்பி வருவதாக ஹொண்டுராஸை சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் உள்ளடங்கிய குடியேற்றவாசிகள் கூறுகின்றனர்.
அமெரிக்க எல்லையை மூடப்போவதாகவும், தேவைப்பட்டால் ராணுவம் இதில் ஈடுபடுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.