சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 3 வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல்

135

மட்டக்களப்பின் வவுணதீவு பொலிஸ்பிரிவில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வை மேற்கொண்ட இரண்டு உழவு இயந்திரங்களையும், பெக்கோ கனரக வாகனம் ஒன்றையும் வவுணதீவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கோழியனாறு, முள்ளாமுனை பிரதேசத்தில் மண் ஏற்றப்பட்ட நிலையில்   இரண்டு உழவு இயந்திரங்களும், பெக்கோ வாகனம் ஒன்றையும் அவ் வாகனங்களின் சாரதிகளையும் நேற்று செவ்வாய்கிழமை மாலை  கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட வாகனங்களையும் சாரதிகளையும் மட்டக்களப்பு நீதிமன்றில் இன்று புதன்கிழமை காலை  ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக  வவுணதீவு பொலிஸ்  பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE