முரண்பாடுகள் அற்ற சமூகத்தினை உருவாக்குவதற்கான பயிற்சி நிகழ்வு 

155
மன்னார் நகர் நிருபர் 
யுத்தத்துக்கு பின்னர் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை எற்படுத்தும் வகையில் மத தலைவர்கள் மற்றும் மதம் சார்ந்த அங்கத்தவர்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், முரண்பாடுகளையும் தவிர்ப்பதற்கான செயற்பாடுகளின் ஒன்றாக தேசிய சமாதன பேரவையின் அனுசரனையில் LIRC அமைப்பின் எற்பாட்டில் இரண்டு நாள் பயிற்சி பட்டறையானது இன்று ஆரம்பிக்கப்பட்டது.
மதம் சார்ந்த முரண்பாடுகள் அண்மை காலங்கலில் அதிகரித்துள்ளதன் காரணமாக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்ககூடிய பல்வேறு சமூக விரோத செயற்பாடுகள் பிரதேச மட்டத்தில் அதிகரிப்பதனை  குறைக்கும் பொருட்டு தேசிய சமாதான பேரவையின் அணுசரனையில் இன்று காலை 10 மணியளவில் ஆகாக்ஷ் உணவு விடுதியில் குறித்த செயலமர்வு பயிற்சி பட்டறையானது இடம்பெற்றது.
குறித்த பயிற்சி பட்டறையில் மதம் சார்ந்த முரண்பாடுகளை குறைப்பதற்கான விரிவுரைகளும் அத்துடன் முரண்பாடுகள் அற்ற கலந்துரையாடல் தொடர்பான பூரண விளக்கங்களும் நடைமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பல் மத பிரதிகள் மற்றும் மதம் சார்ந்த அங்கத்தவர்கள், கிராம அலுவலர்கள், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இவ் நிகழ்வுக்கு சிறப்பு வளவாளராக செயல்திட்ட முகாமைத்துவ ஆலோசகரான ஜே.பெனா கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE