ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது கடந்த 24 மணி நேரத்தில் விமானப் படைகள் மேற்கொண்ட குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீத பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் தீவிரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை கட்டுபடுத்தும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று காலையில் முதல் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரமாக கஸ்னி மாகாணத்துக்கு உட்பட்ட அன்டார் மற்றும் காராபாக் மாவட்டங்களில் உள்ள தலிபான்கள் பதுங்குமிடங்களின் விமானப் படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 20 க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் குறித்த தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக என அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.