சர்க்கரை நோயின் உள்ளவர்கள் ஒருசில காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
- வெண்டைக்காய் – 1/2 கப்
- இஞ்சி ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
- வெண்டைக்காயை நறுக்கி அதனுடன் இஞ்சி சாறு மற்றும் நீர் சேர்த்து நன்கு அரைத்து, வடிகட்டினால் ஜூஸ் தயார்.
- இந்த ஜூஸை தினமும் காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன் குடிக்க வேண்டும். இதை ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வந்தால் ன்சர்க்கரை நோயி தீவிரம் விரைவில் குறையும்.
நன்மைகள்
- வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் விட்டமின்கள் ரத்த சர்க்கரையின் அளவை சீராக்கி, சர்க்கரை நோயை சரிசெய்ய உதவுகிறது.
- நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
- வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.
- இஞ்சியில் உள்ள பாலிஃபீனால்கள், ரத்த சர்க்கரையின் அளவை குறைத்து, சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்கும்.
- இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
- காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.