சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாக வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து, இது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்த கூட்டமைப்பு தயாராகி வருகிறது.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் தீர்க்கமான முடிவு ஒன்றை பெறும் நோக்கில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
தற்போது நடைமுறையிலுள்ள அரசாங்கத்திற்கு எதிர்ப்பு வெளியிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளன.
பொதுநலவாய நாடுகளின் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து இராஜதந்திரகளையும் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தற்போது நாட்டிள் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மைக்கு மத்தியில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஒன்றை எதிர்பார்ப்பதில் பயனில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு திருத்தம் நோக்கி செல்வதற்கு எந்த விதத்தில் வாய்ப்பு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.