இடைநிறுத்தம் செய்யப்பட 57 வயதான பேடார் லிசோவ்

175

நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கேரிய அணி பயிற்சியாளர் பேடார் லிசோவை இடைநிறுத்தம் செய்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் உத்தரவிட்டது.

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் நேற்றுமுன்தினம் நடந்த 57 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சோனியா சாஹலுக்கு எதிரான போட்டியில் பல்கேரியா வீராங்கனை ஸ்டானிமிரா பெட்ரோவா தோல்வி கண்டதாக அறிவித்ததும் அதிருப்தி அடைந்த பல்கேரியா அணியின் பயிற்சியாளர் பேடார் லிசோவ் தண்ணீர் போத்தலை ரிங் (மைதானம்) பகுதியில் எறிந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

இடைநிறுத்தம் செய்யப்பட 57 வயதான பேடார் லிசோவ் (பல்கேரியா) ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE