மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கு­வ­தற்கு மஹிந்த தரப்பு

197

பிர­த­ம­ரா­கவும் அமைச்­சர்­க­ளா­கவும்  மற்றும் இரா­ஜாங்க, பிரதி அமைச்­சர்­க­ளா­கவும்  செயற்­பட மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தினால்  இடைக்­கால தடை விதிக்­கப்­பட்­டுள்ள மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட 49 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இன்­றைய தினம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்­றி­ரவு கூடிய சிறி­லங்கா பொது­ஜன பெர­முன மற்றும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பங்­கேற்ற அவ­சரக் கூட்­டத்­தி­லேயே இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.

அத்­துடன் இன்­றைய தினம் நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற அமர்வில் பங்­கேற்­ப­தில்லை என்றும் இன்று காலை சபா­நா­யகர் தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் கலந்­து­கொள்­வ­தில்லை என்றும் நேற்­றைய கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இந்தக் கூட்டம் நேற்று மாலை அவ­ச­ர­மாக நடை­பெற்­றது. மகிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­வி­னதும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னதும் சுமார் 90 க்கும் மேற்­பட்ட எம்.பி.க்கள் இந்தக் கலந்­து­ரை­யா­டலில் பங்­கேற்­றி­ருந்­தனர்.

சுதந்­திரக் கட்­சியின் அதி­ருப்­தி­யா­ளர்கள் எனக்­க­ரு­தப்­படும் துமிந்த திஸா­நா­யக்க மற்றும் விஜித் விஜி­த­முனி சொய்சா உள்­ளிட்ட எம்.பி.க்களும் இதில் கலந்­து­கொண்­டனர். இதன்­போது தற்­போ­தைய அர­சியல் நெருக்­கடி நிலை தொடர்பில் விரி­வா­கவும் ஆழ­மா­கவும் ஆரா­யப்­பட்­டது.

குறிப்­பாக பாரா­ளு­மன்றக் கலைப்புத் தொடர்­பான உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்ப்பு எவ்­வாறு அமையும் என்­பது குறித்து பேசப்­பட்­டி­ருக்­கி­றது. பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்­தமை சரி­யா­னது அல்­லது தவ­றா­னது என்று  தீர்ப்பு வந்தால் அடுத்த கட்­ட­மாக என்ன செய்­வது என்­பது குறித்தும் ஆரா­யப்­பட்­டி­ருக்­கி­றது.

இதன்­போது மகிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட பல்­வேறு எம்.பி.க்கள் ஜனா­தி­ப­தி­யிடம் பல யோச­னை­களை முன்­வைத்­தி­ருக்­கின்­றனர். அப்­போது கருத்து வெளி­யிட்ட ஜனா­தி­பதி அது தொடர்பில் தற்­போது ஆராய வேண்­டி­ய­தில்லை என்றும்  தீர்ப்பு வந்­த­வுடன் அது குறித்து ஆரா­யலாம் என்றும் கூறி­யி­ருக்­கிறார்.  எவ்­வா­றெ­னினும்  உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்ப்பு எவ்­வாறு அமைந்­தாலும்   அனை­வரும்  எதிர்­கா­லத்தில் ஒரு அணி­யாக செயற்­ப­ட­வேண்டும் என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்­டுள்ளார்.

அதே­போன்று இன்­றைய தினம் நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற அமர்வு குறித்தும் பேசப்­பட்­டி­ருக்­கி­றது. அதில் பாரா­ளு­மன்ற அமர்வில் பங்­கேற்கக் கூடாது என்ற அதி­க­மான எம்.பி.க்கள் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

அது தொடர்பில் நீண்ட நேரம் ஆராய்ந்த பின்னர் இன்­றைய பாரா­ளு­மன்றக் கூட்­டத்தில் பங்­கேற்­ப­தில்லை என்றும் காலையில் நடை­பெறும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்­திலும் கலந்­து­கொள்­வ­தில்லை என்றும் ஏக­ம­ன­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

தொடர்ந்து இன்­றைய தினம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் ஆஜ­ரா­கு­மாறு மகிந்த ராஜ­பக்­ச­வுக்கும் அமைச்­சர்­க­ளா­கவும் இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளா­கவும் பிர­தி­ய­மைச்­சர்­க­ளா­கவும் செயற்­பட்­ட­வர்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் ஆரா­யப்­பட்­டி­ருக்­கி­றது.

இதன்­போது மகிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட குறித்த பத­வி­களை வகித்த 49 பேரும் இன்­றைய தினம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கு­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.  மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு எதி­ராக  122 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளினால் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட  கோ விரான்டோ மனு  தொடர்­பி­லேயே இந்த இடைக்­கால தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.  அந்­த­வ­கையில் இன்­றைய தினம்    நீதி­மன்­ற­ததில்  ஆஜ­ரா­கு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்ள நி்லையில்  ஆஜ­ரா­கு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை மேலும் பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான இந்தக் கூட்­டத்தில் பேசப்­பட்­டி­ருக்­கி­றது.

பாரா­ளு­மன்ற கலைப்பு விவ­காரம் வரவு செலவுத் திட்டம் முன்­வைக்­கப்­ப­டா­ம­லுள்ள நிலைமை ஜன­வரி முதலாம் திக­தி­யி­லி­ருந்து எவ்­வாறு செயற்­ப­டு­வது என்­பது தொடர்­பாக பல்­வேறு விட­யங்கள் குறித்தும் பேசப்­பட்­டி­ருக்­கின்­றது. இதன்­போது கடந்த காலத்தில் இடம்­பெற்ற பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் ஜனா­தி­பதி கருத்து வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

குறிப்­பாக மத்­திய வங்கி ஊழல் விவ­காரம் தொடர்பில் தான் கடு­மை­யான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமன்றி கடந்த மூன்றரை வருட காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் தொடர்பில் ஆராய விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும் என்றும் ஜனாதிபதி இந்தக் கூட்டத்தின் போது தெரிவித்திருக்கிறார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்து  ஸ்திர அரசாங்கம் நியமிக்கப்பட்ட பின்னர்  கடந்த அரசாங்க காலத்தில்  இடம்பெற்றதாகக் கூறப்படும்  ஊழல்கள் குறித்து விசாரிக்க  ஆணைக்குழு அமைக்கப்படும் என்றும்  ஜனாதிபதி  இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

SHARE