முகத்தில் வடியும் எண்ணை தன்மையை போக்கும் வெள்ளரிக்காய்

227

பொதுவாக சில பெண்களுக்கு முகம் பார்ப்பதற்கு எப்போழுதும் எண்ணை வடிந்தே காணப்படும்.

இதற்கு காரணம் முகத்தில் பயன்படுத்தும் கிரீம்கள், ஹார்மோன்களின் மாற்றம், சுற்றுசூழல் காரணத்தால், எண்ணெய் உணவுகள், அதிக மன அழுத்தம் என இப்படி காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இதன் தாக்கத்தால் முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிக படியான எண்ணெய் பசையை வெளியிடும்.

இதனால் முகம் பார்ப்பதற்கு எண்ணை பசையுடனே காணப்படும். இதற்கு நம் வீட்டுல் இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் இந்த பிரச்சினையை நம்மால் தீர்வுக்கு கொண்டு வர இயலும்.

எண்ணெய் வடிதலை தடுப்பது வெள்ளரிக்காயை சிறந்த பொருளாக கருதப்படுகின்றது. இதனை வைத்து முகத்தில் வடியும் எண்ணை தன்மையை எவ்வாறு போக்கலாம் என்று பார்ப்போம்.

  • முதலில் வெள்ளரிக்காயை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் மஞ்சள் 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் சேர்த்து முகத்தில் பூசி கொள்ளவும். 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 1 மறை செய்து வந்தால் எண்ணெய் வடிதல் நின்று விடும்.
  • 1/2 கப் வெள்ளரிக்காயை எடுத்து கொண்டு, 1 ஸ்பூன் யோகர்டுடன் சேர்த்த்து அரைத்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். இந்த குறிப்பு மிக விரைவில் நல்ல பலன் தரும்.
  • கால் பங்கு வெள்ளரிக்காய், பாதி பழுத்த தக்காளி ஆகிய இரண்டையும் ஒன்றாக அரைத்து முகத்தில் தடவவும். பின் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இந்த குறிப்பு மிருதுவான மின்னும் பொலிவை தரும்.
  • வெள்ளரிக்காயை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் முல்தானி மட்டி 2ஸ்பூன், பன்னீர் 1 ஸ்பூன் சேர்த்து முகத்தில் பூசவும். 20 நிமிடம் சென்று முகத்தை வெது வெதுப்பான நீரிலும் கழுவலாம். இது எண்ணெய் வடித்தலை நிறுத்தி விடும்.
  • எலுமிச்சையும் வெள்ளரிக்காயும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றையும் சேர்த்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவலாம். இந்த் குறிப்பு முகத்தை எண்ணெய் பிசையில்லாமல் வைத்து கொள்ளலாம்.

SHARE