கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீர் சுகவீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளச் சென்ற சிறுவன் ஒருவனுக்கு ஊசி மாற்றி ஏற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தை மூடி மறைக்க மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டதாக பாதீக்கப்பட்ட சிறுவனின் உறவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காய்ச்சல் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கச் செனற் சிறுவனுக்கு ஊசி ஏற்றபட்டது.
இதன்போது குறித்த சிறுவனின் தந்தையால் ஏன் எனது மகனுக்கு ஊசி ஏற்றினீர்கள் என கேட்ட போது அங்கு கடமையில் இருந்தவர்காளால் அது தவறுதலாக ஏற்றபட்டுள்ளது.மன்னித்துக் கொள்ளுங்கள் என கூறினர்.
இந்த நிலையில ஊசி ஏற்றப்பட்ட குறித்த சிறுவன் ஊடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
வேறு ஒரு நபருக்கு போட இருந்த ஊசியை தவறுதலாக இச் சிறுவனுக்கு ஏற்றப்படுள்ளதாக வைத்தியர்களால் கூறப்பட்டதாகவும் அச் சிறுவனின் தந்தை தெரிவித்தார்.
தொடர்ந்தும் இப்படிப்பட்ட செயல்களை பலர் சுட்டி காட்டிய போதும் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலை நிவாகம் கவனத்தில் எடுக்கவில்லை என மன்னார் மாவட்ட மக்களும் சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.