சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார ஆலோசகராக இந்தியப் பெண்-கீதா கோபிநாத்

178

சர்வதேச நாணய நிதியத்தின் 11 ஆவது தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

189 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சர்வதேச நாணய நிதியம், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

உலகளாவிய நிதி ஒத்துழைப்பு, நிதி ஸ்திரத்தன்மை, சர்வதேச வர்த்தக வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்றவை இதன் முக்கிய பணிகளாகும்.

இந்த அமைப்பின் 11 ஆவது தலைமை பொருளாதார ஆலோசகராக அமெரிக்காவில் வசிக்கும் 48 வயதுடைய இந்திய பெண் கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தில் தலைமை பொருளாதார ஆலோசகர் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி ஆகும்.

கடந்த முதலாம் திகதி சர்வதேச நிதியத்தில் பதவி ஏற்றுக்கொண்ட கீதா கோபிநாத், இந்த அமைப்பில் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.

இதற்கு முன்பு தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி வகித்து வந்த மவுரிஸ் ஓப்ட்ஸ்பெல்ட் கடந்த 31 ஆம் திகதி ஓய்வு பெற்றதை தொடர்ந்தே அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE