பொதுவாக சில பெண்களுக்கு மூக்கில் உதட்டிற்கு கீழ், நாடியிலும், வெள்ளைப் புள்ளிகள் தென்படும்.
இது கரும்புள்ளிகள் போல் அசிங்கமாக இல்லாவிட்டாலும், இந்த வெண்புள்ளிகளும் கிருமிகளால் வரக் கூடியதே ஆகும்.
அழுக்கு, கிருமி , இறந்த செல்கள், எண்ணெய் ஆகியவை ஒன்றாக கலந்து, வெண்புள்ளிகளாக ஆரம்பிக்கும். இது முகத்தின் அழகினையே கெடுத்துவிடும்.
இதற்கு அடிக்கடி பார்லர்கள் செல்லமால் வீட்டில் இருக்கம் டூத் பேஸ்ட்டை கொண்டு சரி செய்ய முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- புதினா கலந்த டூத் பேஸ்ட் -சிறிய அளவு
- உப்பு – ஒரு சிட்டிகை
- ஐஸ் துண்டுகள் – 1
செய்முறை
முதலில் புதினா டூத் பேஸ்ட்டில் சிறிது உப்பு கலந்து, வெண்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தேயுங்கள்.
பின் 5 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.
பின்னர் ஐஸ் கட்டியை ஒரு மெல்லிய துணியினால் கட்டி, அந்த பகுதிகளில் மசாஜ் செய்யுங்கள்.
டூத் பேஸ்டிலுள்ள புதினா சரும துவாரங்களை திறக்கும். உப்பு சருமத்திலுள்ள வெண்புள்ளிகளை அழுக்குகளை இறந்த செல்களை வெளியேற்றும்.
ஐஸ் கட்டி சரும துவாரங்களை மூடச் செய்யும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். வாரம் மூன்றுமுறை செய்யலாம். இதனால் விரைவில் வெண்புள்ளிகள் மறைந்துவிடும்.