சுமந்திரனைவைத்தே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சுக்குநூராக்க குள்ளநரி பிரதமர் ரனில் திட்டம்

378

 

சிறீலங்காவின் இரு பிரதான இனவாதக் கட்சிகள் தமது ஆட்சி அதிகாரத்திற்காக போராடிவரும் நிலையில் எந்ந ஒரு நிபந்தனையும் இன்றி ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பது என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் கண்டனத்திற்குரியது.

தமிழின அழிப்பில் தென்னிலங்கையின் இரு பெரும் கட்சிகளும் ஒன்றிற்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல, தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக்கட்சியும் ஒன்றே. ஒரு கட்சியை தண்டிப்பதற்கு அல்லது சிங்கள தேசங்களில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு அல்லது அவர்களின் கடும்போக்கான நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுப்பதற்காகவே அரச தலைவர் தேர்தலின் போது ஏதாவது ஒரு கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதுடன்டு.

 

ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கே தமது வாக்குகளை அளிப்பதுண்டு. அவ்வாறு தமிழ் மக்களால் வழங்கப்பட்ட வாக்குகளை பெற்ற பின்னர் தமது பணத் தேவைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப்பெரும் இன அழிப்பை மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிபந்தனைகள் இன்றி ஆதரவு வழங்குவது மிகப்பெரும் வரலாற்று துரோகமாகும்.

தென்னிலங்கையில் நெருக்கடிகள் வரும்போது அவர்களை காப்பாற்றி எம்மை அழிக்க அவர்களுக்கு துணைபுரிவதற்காக தமிழ் மக்கள் தமது வாக்குகளை அளிக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியை எந்தவித நிபந்தனையுமின்றி காப்பாற்ற வேண்டும் என்றால் கடந்த தேர்தலின் போது தமிழ் மக்கள் விஜயகலா மகேஸ்வரனின் குழுவுக்கு வாக்களித்து அவர்களில் 14 பேரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருப்பார்கள்.

மேற்குலகம் வழங்கிய போலியான வாக்குறுதிகளையும், அவர்கள் வழங்கிய பணத்தையும் வாங்கிக்கொண்டு தமிழ் மக்களின் கோரிக்கைகளை விற்றுப் பிழைக்கும் காரியத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீள் பரிசீலினை செய்யவேண்டும்.

மகிந்த ராஜபக்சாவுக்கு ஆதரவுகளை வழங்குவதானால் பின்வரும் நிபந்தனைகளுக்கு மகிந்தா உடன்பட்டு எழுத்து மூலமான பதிலைத் தரவேண்டும் என சம்பந்தர் பி.பி.சி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்த கோரிக்கை பின்வருமாறு:

நம்பிக்கையுடைய உறுதியான அதிகாரப் பகிர்வு, பிராந்தியங்களின் அடிப்படையில் அளிக்கப்படும் இந்த அதிகாரப் பகிர்வு மீளப் பெற முடியாததாக இருக்க வேண்டும். ஒரு பிராந்தியமோ, மாகாணமோ அந்த அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். மத்திய அரசு அதில் தலையிடக்கூடிய நிலை இருக்கக்கூடாது. மக்களின் நாளாந்த தேவைகளை மக்கள் தேர்வு செய்யும் பிரதிநிதிகளின் ஊடாக ஒரு பிராந்திய அமைச்சரவையின் ஊடாக பிராந்திய சபையின் ஊடாக வழிவகுக்பப்பட வேண்டும் என்பது தான் அந்த தீர்வுத் திட்டம்.

கேட்பதற்கு நான்றாகத் தான் இருக்கின்றது, ஆனால் அதற்கான பதிலை மகிந்தா கூறவில்லை. எனினும் ரணில் விக்கிரமசிங்காவிடம் இது போன்ற கோரிக்கைக்கான எழுத்து மூலமான உறுதி மொழிகளை வாங்கியுள்ளாரா சம்பந்தன் என்றால் அதற்கான பதிலைத் தெரிவிக்க சம்பந்தர் மறுத்துவிட்டார்.

ரணிலுடன் ஒரு வேலைத்திட்டத்தில் இறங்கியுள்ளதாக மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றார். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தென்னிலங்கையின் எந்த கட்சியையும் ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டிய தேவையில்லை, மேற்குலகத்தை காப்பாற்ற வேண்டிய அவசியமும் எமக்கில்லை.

கடந்த ஒன்பது வருடங்களாக தமிழ் மக்கள் போரில் தோல்வியடைந்து சரணடைந்த அடிமை வாழ்வையே அனுபவித்து வருகின்றனர். கடந்த ஒன்பது வருடங்களில் மேற்குலகம் எமது இன்னல்களை போக்கவில்லை, கடந்த மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் நல்லாட்சி அரசு என்ற அரசும் எமக்கு எதனையும் செய்யவில்லை. அதாவது எமது அடிப்படைப் பிரச்சனைகளை கூட தீர்க்கவில்லை.

ஒரு மிகப்பெரும் போரினால் பாதிப்புக்களைச் சந்தித்த இனம் என்ற ஒரு அனுதாபத்தைக் கூட யாரும் எமக்கு காண்பிக்கவில்லை. எனவே இந்திய நலனையோ அல்லது சர்வதேச நலனையோ அல்லது சிங்கள தேசத்தின் நலனையோ காப்பாற்ற வேண்டிய தகமையில் இருந்து அவர்கள் எம்மை அகற்றிவிட்டனர். நாம் அவர்களுக்கு நிபந்தனையற்ற உதவிகளை வழங்கத்தேவையில்லை.

போரினவாதி ரணிலைக் காப்பாற்றுவதற்கு மாற்றீடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன கோரிக்கைகளை அல்லது உறுதிமொழிகளின் முன்வைத்துள்ளது என்பது தொடர்பில் தமிழ் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும்.

இல்லையேல் ஐ.தே.காவிடமோ அல்லது அதற்கு ஆதரவான நாடுகளிடமோ மறைமுகமாக பெருமளவு பணத்தைப் பெற்றுக்கொண்டு நிபந்கதையற்ற ஆதரவை வழங்கியதாகவே நாம் கருத இடமுண்டு. அதாவது ஒட்டுக்குழு டக்களஸ் தேவானந்தாவிற்கும், கட்சி தாவியதால் துரோகி என்று அழைக்கப்படும் வியாழேந்திரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்த வேறுபாட்டடையும் நாம் காணமுடியாது.

ஓட்டுக்குழு தலைவன் டக்களஸ் கூறுகின்றான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் 9 ஆம் நாளில் இருந்து நிவாரணம் வழங்கப்படுமாம், வியாழேந்திரன் கூறுகின்றார் எதிர்வரும் மார்கழி மாதம் 31 ஆம் நாளுக்கிடையில் கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படுமாம், அரசியல் கைதிகள் தொடர்பிலும் நடவடிக்கையாம்.

ஆக மொத்தத்தில் துரோகிகள் கூட ஒரு நிபந்தனையுடன் தான் தமது ஆதரவுகளை வழங்கியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சிங்கள பேரினவாதக் கட்சிக்கு தாம் வழங்கும் ஆதரவுக்கான நிபந்தனைகளை தெரிவிக்கமறுத்தால் தமிழ் மக்கள் அனைவரும் அதனை புறக்கணிக்க வேண்டும் என்பதுடன், ஏகமனதாக ஒரு மாற்று அரசியல் தலைமை ஒன்றை நாம் விரைந்து உருவாக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

சிங்கள அரசின் நெருக்கடிகளை பயன்படுத்தி தமிழ் மக்கள் பெறவேண்டிய பல கோரிக்கைகள் எம்வசம் உள்ளன.

• காணாமல் போனவர்கள் தொடர்பான சுயாதீன விசாரணையும் அதற்கான தீர்வும்

• அரசியல் கைதிகளின் உடனடியான விடுதலை

• சிறீலங்கா அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துதல்

• சிங்கள இராணுவத்தினர் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவித்தல்

• அரசியல் தீர்வுப் பொறிமுறைக்கான கால அட்டவணையை நிர்ணயித்தல்

இவ்வாறு பல கோரிக்கைகள் எம்வசம் உள்ளபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது தமிழ் மக்களின் மனங்களில் கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.

2015 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் தலைமையிலான கூட்டாட்சி ஒன்று ஏற்படுத்தப்பட்டபோது அதனை நல்லாட்சி என தெரிவித்து நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்கி அனைத்துலகத்தில் சிறீலங்கா அரசுக்கு ஒரு நற்பெயரை ஏற்படுத்திய பெருமையும் அவர்களையே சாரும்.

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என்ற தமிழ் மக்களின் போராட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளும் நிலையின் விளிம்பில் இருந்தபோது அதனை உள்ளகப்பொறிமுறையாக மாற்றியதில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பின்புலம் உள்ளதாக 2015 ஆம் ஆண்டு கருதப்பட்டது.

அதாவது பேரம்பேசும் நிபந்தனைகளாக தமிழ் மக்களின் கோரிக்கைகள் எதனையும் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை. மாறாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி, நாடாளுமன்றக் குழு பிரதிநிதிகளின் தலைவர் பதவி மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் பதவி ஆகிய 3 பதவிகளையுமே கூட்டமைப்பு கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னரும் சிறீலங்கா அரசு கொண்டுவந்த மூன்று வரவுசெலவுத்திட்டங்களையும் நிபந்தனையற்று ஆதரித்து சிங்கள அரசை வலுப்படுத்திய பெருமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சாரும்.

வரவு செலவுத்திட்டத்தை ஆதரிப்பதன் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்திக் காண்பித்தால் தான் ரணில் தலைமையிலா அரசு மூலம் அரசியல் தீர்வு ஒன்றை நாம் எட்டமுடியும் என்பதே தான் வழங்கிய ஆதரவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்மந்தன் அவர்கள் தமது உறுப்பினர்களுக்கு அளித்த விளக்கமாகும்.

ஆனால் சிங்கள கட்சிகள் தமது தமிழர் எதிர்ப்பு மனநிலையில் இருந்து ஒரு அங்குலம் தன்னும் நகரப்போவதில்லை என்பது உலகத்தமிழ் இனம் அறிந்த உண்மை எனினும் தன்னை ஒரு அரசியல் சாணக்கியர் எனக் கருதும் சம்பந்தருக்கு அது எவ்வாறு தெரியாமல் போனது?.

இதில் என்ன வேடிக்கை என்றால், கடந்த 3 வரவு செலவுத்திட்டங்களிலும் சிறீலங்கா படைத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு மிகவும் அதிகம். அதாவது 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் போர் தீவிரமாக இடம்பெற்ற போது மேற்கொள்ளப்பட்ட அதிகரிப்பை விட மிக அதிகம். அதனை அறிவதற்கு நீங்கள் கீழே உள்ள தரவுகளை பார்க்கலாம்.

ஆண்டுகள்                  பாதுகாப்புச் செலவு (பில்லியன் ரூபாய்கள்)
2008                                                    166
2009                                                    177
2016                                                     307
2017                                                     284
2018                                                     290
2019                                                      306

 

 

2008 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசு மிகப்பெரும் ஒதுக்கீடு ஒன்றை செய்திருந்தது அதற்கான காரணம் அதன் வான்படையின் அதிகரிப்பாகும், அதாவது சிறீலங்கா வான்படை 25 விகித வளர்ச்சியை கண்டிருந்தது அதற்கான ஆயுதக் கொள்வனவுக்கே சிங்கள அரசு மிகப்பெரும் நிதியை ஒதுக்கியிருந்தது.

அதன் பின்னர் 2009 ஆண்டு 177 பில்லியன் ருபாய்களை சிங்கள அரசு ஒதுக்கியதுடன், அதற்கு மேலதிகமான 15 விகித நிதியை ஒதுக்கி தமிழ் மக்கள் மீதான மிகப்பெரும் இனப்போர மேற்கொள்வதற்கு தேவையான 25,000 இராணுத்தினரை மேலதிகமாக படையில் இணைத்திருந்தது.

அதாவது போரின் போது சிறீலங்கா அரசு ஒதுக்கிய நிதிக்கான காரணங்கள் உண்டு. ஆனல் போர் நிறைவடைந்த பின்னர் போரின் போது செலவிட்ட தொகையை விட அதிக தொகையை சிறீலங்கா அரசு செலவிட காரணம் என்ன?

ஆம் தமிழ்ப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கல், சிங்கள குடியேற்றங்கள், படையினரின் குடும்பங்களை குடியேற்றுதல், அவர்களை பராமரித்தல், சிறீலங்கா படையினர் மூலம் மேற்கொள்ளப்படும் உதவிகள் மூலம் தமிழ் மக்களின் மனங்களை வென்று தமிழ் பிரதேசத்தில் சிங்களப் படையினரின் நிரந்தரமான இருப்புக்கு வழிஏற்படுத்துதல் என்பவற்றிற்காக ஒதுக்கப்படும் நிதியே இதுவாகும்.

வெள்ளம் வரும்போது சிறீலங்கா இராணுவம் ஓடிச்சென்று மீட்புப் பணிகளைச் செய்கின்றது, ஆலயங்களை புனரமைக்கின்றது, தமிழ் பகுதிகளில் பௌத்த மயமாக்கலை மேற்கொள்கின்றது, சுற்றுலா விடுதிகளை கட்டுகின்றது, ஆலயங்களில் அங்கு செல்பவர்கள் இளைப்பாற மடங்களைக் கட்டுகின்றது இவ்வாறு சிறீலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் பல நூறு செயற்திட்டங்களை நான் இங்கு குறிப்பிட முடியும். ஆனால் அதற்கு இங்கு இடம் போதாது.

அதாவது பாதுகாப்புச் செலவீடு என ஒதுக்கப்படும் நிதி மூலம் சிறீலங்கா படைத்தரப்பு தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மயமாக்கலையும், இராணுவமயமாக்கலையும் சந்தமின்றி செய்து வருகின்றது. அது மட்டுமல்லாது, அந்த நிதியை பயன்படுத்தி தமிழ் அரசியல்வாதிகளை தனக்கு சாதகமாகவும் திருப்பியுள்ளது.

 

இந்த நிதியே தனக்கு சாதகமான தமிழ் அரசியல்வாதிகளின் தேர்தல் செலவுக்காக இரகசியமாக வழங்கப்படும் நிதியாகும். ஏனெனில் பாதுகாப்புச் செலவீனத்தின் கணக்குக்களை யாரும் சரிபார்க்க முடியாது, அது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்ற காரணத்தை முன்வைத்து எல்லோரினதும் வாயையும் மூடிவிடலாம்.

தற்போது எதிர்வரும் ஜனவரி மாதம் சிறீலங்கா அரசு கொண்டுவரவுள்ள வரவுசெலவுத்திட்டத்திலும் மிக அதிக தொகை பாதுகாப்பு செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டதை விட 1000 கோடிகள் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்லாது 2023 ஆம் ஆண்டு வரையிலும் சிறீலங்கா அரசு இவ்வாறான மிகப்பெரும் தெகையையே படைத்தரப்புக்கு ஒதுக்கப்போகின்றது என பாதுகாப்பு புலனாய்வு மையம் (Strategic Defence Intelligence -SDI) தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் சிறீலங்கா அரசு தனது வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுகள் தேவை.

ஆனால் வழமைபோல வடக்கு கிழக்கில் இருந்து படையிரை வெளியேற்றுவோம், படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்போம், அரசியல் கைதிகளை விடுவிப்போம் என கூறிக்கொண்டு இராணுவமயமாக்கலை ஊக்குவிக்கும் வரவுசெலவுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பது என்பது ஒரு அரசியல் ஏமாற்றுத்தனமாகும்.

எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தை நிபந்தனையற்று ஆதரித்து தமிழ்ப் பிரதேசங்களில் ஏற்படுத்தப்படும் இராணுவமயமாக்கலை தமிழத் தேசியக் கூட்டமைப்பு நேரிடையாக ஆதரிக்கப்போகின்றதா அல்லது அதனை ஒரு பேரம்பேசும் அரசியல் பொருளாக்கி தமிழ் மக்களின் சில கோரிக்கைகளையாவது சிறீலங்கா அரசிடம் இருந்து பெறப்போகின்றதா என்பதே தற்போதைய கேள்வி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அவர்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வறட்சியானது அவர்களுக்கு சிங்கள அரசிடம் சரணடையும் நிலையையும், ரணிலா – மகிந்தாவா என்ற ஒரு மலிவான அரசியலையும் மேற்கொள்ளும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அவர்களை தெளிவுபடுத்தி எமது கோரிக்கைளை நிறைவேற்றக் கிடைக்கும் பேரம்பேசும் அரசியல் சந்தர்ப்பங்களை தவறவிடாது பயன்படுத்தும் அழுத்தங்களை தமிழ் மக்கள் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

சிறீலங்கா அரசின் வரவுசெலவுத்;திட்டத்தை நிபந்தனை அற்ற முறையில் ஆதரிக்க வேண்டாம் என்ற கோரிக்கைகளை தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முன்வைப்பதுடன், அதற்கான ஜனநாயகப் போராட்டங்கள் தொடர்பிலும் தயாகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் உள்ள மக்கள் சிந்திக்க வேண்டும்.

இது தொடர்பில் ஏற்படும் எமது விழிப்புணர்வானது அனைத்துலக மட்டத்தில் ஒரு தாக்கத்தை எற்படுத்தும் என்பதுடன் முக்கியத்துவமும் பெறும் ஏனெனில் தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளிடம் தமது கோரிக்கைகளை முன்வைத்து போராடுகின்றனர் என்ற கருத்துக்கு அதிக பெறுமதி உள்ளது.

 

july-1983-2கறுப்பு யூலை (Black July, ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்த இனப்படுகொலை.

 

தமிழர்கள் உயிர்களையும் சொத்துக்களையும் அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்த கோரமான ஒரு நிகழ்வாகும்.

 

இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை படையினரை திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு என கூறப்பட்ட போதும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட செயற்பாடாகவே ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

இது “இனக்கலவரம்” என்ற பொய்க்குள் நடைபெற்ற “இனப்படுகொலை” நிகழ்வாகும்.
உண்மையில் இக்கோர கறுப்பு யூலை நிகழ்வுகளே ஈழத்து தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தி போராட தூண்டியது என்று கூறலாம்.

 

மூன்று தசாப்தகாலமாக நடைபெற்ற தமிழ் மக்களின் அகிம்சை போராட்டம் தோற்றுப் போக தமிழ் இளைஞர்கள் மத்தியில் புரட்ச்சிகர ஆயுதப் போராட்டமாக மாறுவதற்கு தேவையான வலிமையை கருப்பு ஜூலை வலிகளில் இருந்தே ஈழத்து தமிழ் மக்கள் பெற்றார்கள்.

 

கருப்பு ஜூலையில் உச்ச வடிவம்…

 

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்!

 

ஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வைக் குறிக்கும். இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை நிகழ்வில் எவரும் இன்று வரையில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை.

 

இப்படுகொலை நிகழ்வானது இரண்டு வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. இரண்டும் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான வெலிக்கடையில் இடம்பெற்றன. முதலாவது படுகொலை ஜூலை 25, 1983 இல் 35 தமிழ்க் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் கத்தி மற்றும் வாள்களினாலும் பொல்லுகளினாலும் குத்திக் கொல்லப்பட்டனர். இரண்டாவது நிகழ்வு இரண்டு

 

நாட்களின் பின்னர் ஜூலை 28ம் திகதி இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
வெலிக்கடைச் சிறைச்சாலையானது A, B, C, D என நான்கு குறுக்கு வடிவில் அமைக்கப்பட்ட பிரிவுகளைக் கொண்டது. இவற்றில் A3 B3 C3 மற்றும் D3 என்பன சிறைச்சாலையில் கீழ்ப் பகுதியில் உள்ளன. B3, C3 மற்றும் D3 இல் இருந்த அனைவரும் தமிழ் அரசியல் கைதிகளாகும். A3 இல் இருந்தவர்கள் அனைவரும் பயங்கரக் குற்றங்கள் சுமத்தப்பட்ட சிங்களக் கைதிகள்.

 

இப்படுகொலை நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்குமூலத்தின்படி சிறைச்சாலை அதிகாரிகளே அறைக்கதவுகளின் திறப்புகளை சிங்களக் கைதிகளுக்கு கொடுத்ததாக தெரிவித்தனர். ஆனால் சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சிங்களக் கைதிகள் தம்மிடம் இருந்து திறப்புகளைக் களவெடுத்ததாகத் தெரிவித்தனர்.

 

கருப்பு ஜூலையில் வெலிக்கடை சிறைப்படுகொலை, தென்னிலங்கை இனப்படுகொலை ஆகியன நிகழ்த்தப்பட்டன.

 

அதே நேரம் யாழில் திருநெல்வேலி படுகொலைகள் என்பது 1983, சூலை 24, 25 காலப் பகுதியில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் சிங்கள படைத்துறையால் 51 பேர் வரையான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும்.

 

யூலை 23, 1983 இலங்கைப் படைத்துறையினரின் பதின்மூன்று இராணுவம் கொல்லப்பட்டார்கள் என்பதை காரணம் காட்டி ஏற்கனவே சிங்கள பேரினவாதம் திட்டமிட்ட இனப்படுகொலையை கட்டவிழ்த்து தொடர்ந்து பலாலி, சிவன் அம்மன் கிராம், ஆகிய பகுதிகளில் புகுந்து ஸ்ரீலங்கா படைத்துறை தமிழர்களை படுகொலை செய்தது.

 

திருநெல்வேலி தாக்குதல் அல்லது போ போ பிராவோ (Four Four Bravo) என்பது யூலை 23, 1983 அன்று கடமையில் இருந்த 15 பேர் கொண்ட இலங்கை இராணுவ சுற்றுக்காவல் செய்பவர்களின் அழைப்புக் குறியீடாகும். இச் சுற்றுக்காவல் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இச் சம்பவம் கறுப்பு யூலை கலவரத்திற்கு அடிகோலி ஈழப்போரை ஆரம்பித்து வைத்ததென சிலரால் இப்பொழுதும் கருதப்படுகின்றது.

 

ஆனால் கறுப்பு யூலை படுகொலைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட முறையும் அளவும் அதற்கு அரச தரப்பில் இருந்த ஆதரவும் அதனை வெறும் பழித் தாக்குதலாகக் கருத முடியாது.
இந்த தாக்குதலை சாட்டாக வைத்து ஏற்கனவே திட்டமிட்டப்பட்டிருந்தபடி கொழும்பிலும் ஏனைய சிங்களப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் மீதான வன்முறைகளை ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அரசு கட்டவிழ்த்துவிட்டது.
வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்

 

அரசில் முக்கிய அமைச்சர்களாக இருந்த பலரே தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தலைமையேற்று நடத்தினார்கள்.

 

வெலிக்கடைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலை அதிகாரிகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த கோரத் தாக்குதலில் 58 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டார்கள்.

 

இந்த வன்முறைகள் தமிழர் வரலாறில் முதல் தடவையாக பாரிய இடப்பெயர்வை ஏற்படுத்தியது. இந்தியா அனுப்பிவைத்த கப்பல்களில் பெருந்தொகையான தமிழர்கள் தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அகதிகளாக அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

இனப்படுகொலை இதுபற்றி தமிழ் தலமைகள் சிந்திக்கவேண்டும் இனப்படுகொலையை ஆரம்பித்ததே ஜக்கியதேசியக்கட்சி என்பதை மறுக்க யாரும் இல்லை

SHARE