
மைதா மாவு – 300 கிராம்
கார்ன் மாவு (சோள மாவு) – 3 டேபிள் ஸ்பூன்
ஆரஞ்சு கலர் – 1/4 டீஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1/2 லிட்டர் (பொரிக்க)

சர்க்கரை பாகு வைக்க :
பாம்பே காஜாவிற்கு இரண்டு கம்பி பதம் பாகு நீர்க்க இருக்க வேண்டும். சர்க்கரை முழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு, ஆரஞ்சு கலர் சேர்த்து மிதமான சூட்டில் கனமான பெரிய பாத்திரத்தில் கொதிக்க விடவும்.
பாகை விரலில் தொட்டுப் பார்க்கும் போது இரண்டு நூலாக வரும் போது அடுப்பை அணைக்கவும். பாம்பே காஜா போட்டு எடுக்கும் போது சர்க்கரை பாகு இறுக இறுக சிறிது வெந்நீர் சேர்த்துக் கொள்ளவும்.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் சிறிது தண்ணீர் தெளித்து, டேபிள் சால்ட் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
கார்ன் மாவு நெய் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு பிசைந்து வைத்த மைதா மாவை இரண்டு அல்லது மூன்று அப்பளமாக மெல்லியதாக இட்டு கொள்ள வேண்டும்.
கார்ன் மாவு நெய் கலவையை அப்பளங்களின் ஒரு புறம் முழுமையாக தடவி கொள்ளவும். பின் அப்பளங்களை மெல்லியதாக சுருட்டிக் கொள்ளவும் (ரோல்). ரோல் செய்த அப்பளங்களை வேண்டிய அளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் (பாம்பே காஜாவின் அளவு துண்டுகளின் அளவை பொருத்தது ).
வெட்டிய துண்டுகளை மீண்டும் மெல்லிய அப்பளங்களாக இட்டுக் கொள்ளவும். அப்பளத்தை பாதியாக வெட்டி ஒவ்வொரு பாதியையும் இரண்டாக மடித்துக் கொள்ளவும் (முக்கோணமாக).
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முக்கோணங்களை எண்ணெயில் (அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும் ) போட்டு பொரித்து எடுக்கவும்.