பொதுவாக சிலர் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், தொடர்ச்சியாக மது அருந்துதல் ஆகியவை நமது கல்லீரலை கடுமையாக பாதிப்புக்குள்ளாகுவதுண்டு.
புகை, ஆல்கஹால், கண்ட உணவுகள், அசுத்தமான சுற்றுப்புற சூழல் போன்றவை கல்லீரல் பாதிப்புக்குள்ளாக்குவது முக்கிய காரணியாக விளங்குகின்றது.
உங்கள் கல்லீரல் ஆரோக்கியம் சீர்குலைந்து போனால் ஈரல் அழற்சி, ஈரல் நோய் மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்றவை உண்டாகும் அபாயம் இருக்கின்றன.
இதனை இயற்கையாகவே குணப்படுத்த முடியும், இதற்கு சிறந்த பொருளாக உலர் திராட்சை காணப்படுகின்றது.
தற்போது உலர் திராட்சை கொண்டு கல்லீரை எப்படி சுத்தப்படுத்துவது என்று பார்ப்போம்.
தேவையானவை
- உலர்ந்த திராட்சை
- நீர்
செய்முறை
நீங்கள் முதலில் ஒரு பானை, கை நிறைய உலர்ந்த திராட்சை மற்றும் இரண்டு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எந்த விகிதத்தில் நீங்கள் உலர்ந்த திராட்சை மற்றும் நீரை கலக்கிறீர்கள் என்பது மிகவும் அவசியம்.
ஆம், அரை கிளாஸ் அளவு உலர்ந்து திராட்சை எடுத்துக் கொண்டால், ஒன்றரை கிளாஸ் அளவு நீர் கொண்டு நீங்கள் கலக்க வேண்டும். 1:3 என்ற விகிதத்தில் தான் கலக்க வேண்டும்.
பானையில் உலர்ந்த திராட்சை மற்றும் நீர் கலந்த பிறகு அதை மூடி வைத்து சில நிமிடங்கள் சூடு செய்ய வேண்டும்.
சூடாகிய பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைத்துவிடுங்கள். ஓர் நாள் இதை உங்க சமையல் அறையிலேயே வைத்துவிடுங்கள்.
அடுத்த நாள் நீங்கள் காலையில் எழுந்ததுமே, அந்த நீரை குடிக்க வேண்டும். இதை ஒரு வாரம் விடாமல் கடைபிடித்து வந்தால், நீங்கள் ஒரு நல்ல மாற்றத்தை உணர முடியும்.
குறிப்பு
இதை பின்பற்றி வரும் நாட்களில் நீங்கள் கட்டாயம் துரித உணவுகள், ஆல்கஹால், சிகரட் போன்றவற்றை அறவே ஒதுக்கிவிட வேண்டும்.