யாழ். மட்டுவில் பகுதியில் வாள் வெட்டுகுழுவால் வீடு புகுந்து தாக்குதல்

594

யாழ். மட்டுவில் பகுதியில் வாள் வெட்டுகுழுவால் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டுவில் வின்சன் வீதியில் உள்ள வீடொன்றினுள்ளே குறித்த குழுவினர் நேற்றிரவு புகுந்து, வீட்டின் கதவை கோடாரியால் கொத்தி சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளனர்.

வீட்டின் உரிமையாளரான சமாதான நீதவான் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டகுழு இலக்க தகடுகள் அற்ற மோட்டார் சைக்களில் வந்துள்ளதுடன், குறித்த குழுவில் இருபதுக்கும் மேற்பட்டோர் கணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த குழு வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் மட்டுவில் சந்தியில் கூடி நின்று அட்டகாசம் செய்துள்ளதாகவும், அதனால் தாக்குதலுக்கு இலக்கான வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் உதவிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

SHARE