அனைத்து மதங்களும் இறுதியாக காட்டும் வழி ஒன்று – வைத்தியகலாநிதி சிவமோகன்

226

பாராளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது வைத்தியகலாநிதி சிவமோகன் கூறியதாவது மடு பிரதேசம் கிறிஸ்தவ மக்களுக்கு புனித பிரதேசம். அங்கே இந்துக்கள் உரிமை கோரி ஒற்றுமையை குழைக்க கூடாது. அதே போல் திருக்கேதீஸ்வரம் இந்துக்களின் புனித பிரதேசம். பல நூற்றாண்டுகளுக்கு முன் பாடல் பெற்ற பிரதேசம். அங்கு கிறிஸ்தவ மக்கள் உரிமை கோரி இந்துக்களை குழப்பக் கூடாது. இந்து, கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாக வாழும் மண்ணில் ஒரு அசிங்கம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுவும் ஒரு சமய போதனை செய்ய வேண்டிய பாதிரியார் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறது என்பது கவலைக்குரியது. மதம் என்பது ஒவ்வொருவரும் பார்க்கும் பார்வை வேறு. கடைப்பிடிக்கும் மார்க்கம் வேறு மற்றும்படி அனைத்து மதங்களும் இறுதியாக காட்டும் வழி ஒன்று என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அன்பு பரிவு ஒருமை கொண்ட ஒரு அழகிய வாழ்க்கையே அதுவே மதங்களின் இறுதி நோக்கமாகும்.

SHARE