முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஐயன்கன்குளம் பழைய முறிகண்டி புத்துவெட்டுவான் தேறாங்கண்டல் ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தாம் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்கட்டியுள்ளனர்.
நேற்று இரவு ஐயன்கன்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் பெருமளவான பயன்தருமரங்கள் அழிவடைந்துள்ளதுடன் பெரும் அட்டகாசம் செய்துள்ளன.
தொடர்ந்தும் இப்பகுதியில் யானையின் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றன என்றும் இதற்கான நிரந்தரத் தீர்வு ஒன்றினைப் பெற்றுத்தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.