யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் விபரங்கங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி சென்ற வான் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேர் காயமடைந்தனர்.
அதற்கமைய, மானிப்பாய் பகுதியை சேர்ந்த 62 வயதான பெண் ஒருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 51 வயதான பெண்ணொருவரும், வவுனியாவை சேர்ந்த 38 வயதான ஆணொருவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த மற்றுமொரு பெண் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவத்தில் காயமடைந்த ஏழு பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது
டிப்பர் வாகன சாரதியின் கவனயீனமே, இந்த விபத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.