சமையல்காரரின் பேரனும், டீக்கடைக்காரின் மகனும் நாட்டை ஆளுகிறார்கள்: ஒபாமா- மோடி

377

பிரதமர் மோடியுடன் இணைந்து, ஒபாமா பங்கேற்ற ‘மன் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சி நேற்று அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பப்பட்டது.

obama-Mode

சுமார் 35 நிமிடங்கள் ஒலிபரப்பப்பட்ட இந்த பதிவில் அரசியல் வெளிவிவகாரங்கள் உள்ளிட்டவைகள் குறித்து பேசாமல், தனிப்பட்ட விவகாரம் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதாவது, வானொளி மூலம் மக்களுடன் பேசுவது பெருமையாக உள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள்.

இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்த பல வரலாற்று சாதனைகள் செய்துள்ளோம். இந்தியாவில் மோடியின் பணிகளை பார்த்து அமெரிக்க மக்கள் பெருமைப்படுகின்றனர்.

எனது குழந்தைகள் இந்தியாவால் ஈர்க்கப்பட்டுள்ளனர், இந்தியா வரவும் அவர்கள் ஆசைப்படுகின்றனர்.

இந்தியாவின் பெருமைப்பற்றி எனது குழந்தைகளிடம் எடுத்து கூறுவேன். ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பின்னர் எனது குழந்தைகளுடன் இந்தியா வருவேன்.

நானும், மோடியும் ஏழ்மை நிலை பின்னணியிலிருந்து முன்னேறியுள்ளோம். என்து தாத்தா ஒரு சமையல்காரர், மோடியின் அப்பா ஒரு டீக்கடைக்காரர், தற்போது நாங்கள் இருவரும் ஒரு நாட்டை ஆளுகிறோம் என்று கூறியுள்ளார்

SHARE