கஞ்சாவுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது

239

கெசெல்வத்த – சாங்சி ஆரச்சிவத்த பிரதேசத்தில் 07 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது  செய்துள்ளனர்.

கெசல்வத்த பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெசெல்வத்த பிரதேசத்தினை சேர்ந்த 39 வயதான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE