ஹம்பாந்தோட்டையில் தேங்காய் பறிப்பதற்காக தென்னை மரத்தின் உச்சிக்கு ஏறிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீரப்புலி கங்கானம் சுகத் என்ற திருமணமாகாத 46 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரத்தின் உச்சியில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மரண விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.