பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹுகோஸ் ஸ்வய்ர் வலி.வடக்கு மக்களைச் சந்தித்தார்

390

 

யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹுகோஸ் ஸ்வய்ர் இன்றைய தினம் மாலை 2.30 மணியளவில் வலி.வடக்கு மக்கள் தங்கியிருக்கும் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயத்தின்போது பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை வழங்கி வைத்த அவர் பாடசாலை மாணவர்களுடன் பேசியதுடன் அவர்களுக்கு கையொப்பங்களையும் வைத்துக் கொடுத்திருந்தார்.

 

பின்னர் வலி,வடக்கு மீள்குடியேற்றக் குழுவுடனும் சந்தித்துப் பேசியிருந்தார்.

 

இதன்போது வலி,வடக்கின் மீள்குடியேற்ற நிலைமைகள் குறித்து அந்தக் குழுவினர் அமைச்சருக்கு தெளிவான விளக்கத்தை வழங்கியிருந்தனர்.

 

மேலும் மக்களும் தங்களை சொந்த நிலங்களில் துரிதமாக மீள்குடியேற்றுங்கள் என கோரிக்கை விடுத்தனர்.

இங்கே பேசிய அமைச்சர்,

நீங்கள் சொந்த மண்ணில் பிறந்து வளர்ந்திருக்கவில்லை. என்பதனை உங்கள் முகங்களை பார்க்கும்போதே தெரிகின்றது.

டேவிட் கமரூன் இங்கே வருகை தந்திருந்தார். அவருக்குப் பின்னர் நானும் வந்திருக்கிறேன். அது என்னுடைய விருப்பமும் கூட, இலங்கையில் அண்மையில் பல மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன.

இந்த மாற்றங்களோடு மாற்றமாக நீங்கள் உங்கள் சொந்த மண்ணுக்குச் செல்லவேண்டும் என கூறிய அவர் பாடசாலை சிறுவர்களை பார்த்து நீங்கள் உங்கள் சொந்த மண்ணுக்குச் செல்லும்போது இந்த காலணிகளை அணிந்து கொண்டு செல்லுங்கள் என மகிழ்ச்சி பொங்க கூறினார்.

SHARE