யாழில் ஐந்து பேர் பொலிசாரினால் கைது

182

யாழில்.கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை பொருட்களை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் ஐந்து பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு துறை பொறுப்பதிகாரி ஜெரோசன் தலைமையிலான பொலிஸ் விசேட குழுவினர் நேற்று முன்தினம் இரவு வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது , வல்வெட்டித்துறையை சேர்ந்த இருவர் கஞ்சா போதை பொருளை கடத்த முற்பட்ட போது கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 12 கிலோ 300 கிராம் கஞ்சா போதை பொருளை மீட்டனர்.

அதேவேளை அச்சுவேலியை சேர்ந்த நபர் ஒருவரும் கஞ்சா போதை பொருளை கடத்த முற்பட்ட போது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஒரு கிலோ 385 கிராம் கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூவரும் யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை மல்லாகம் புகையிரத நிலையத்தில் ஹெரோயின் போதை பொருளுடன் இருவரை காங்கேசன்துறை சிறப்பு குற்ற தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் இருவரும் மல்லாகம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து 400 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

SHARE