54 இலங்கை பெண்கள் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.

210

குவைத்தில் தொழிலுக்காக சென்று சித்திரவதைக்குள்ளான 54 இலங்கை பெண்கள் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.

இலங்கை தூதரக அலுவலகத்தின் தலையீட்டில் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வேலைக்காக சென்ற வீடுகளில் சித்திரவதைகள், கொடுமைகள் அனுபவித்த 26 பெண்களும், சட்டவிரோதமாக அங்கு தங்கியிருந்த 28 பேரும் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அழைத்து வரப்பட்ட 54 பேரில் 45 பெண்கள் மற்றும் 9 ஆண்கள் உள்ளதாக குவைத்திலுள்ள இலங்கை தூதரக அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குவைத்துக்கான இலங்கை தூதுவர் பாலசுப்ரமணியத்தின் தலையீட்டில் UL 230 ரக விமானத்தில் குறித்த இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

SHARE