43 ஆபாச விடுதிகள் சுற்றி வளைப்பு!

194

கம்பஹா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தப்பட்ட 43 விபச்சார விடுதிகள் மற்றும் அனுமதியற்ற மசாஜ் நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டன.

அங்கு விபச்சார தொழிலில் ஈடுபட்ட 67 பெண்கள் மற்றும் முகாமையாளர்களாக செயற்பட்ட 15 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் உத்தரவிற்கமைய கம்பஹா மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் நாட்டின் பல்வேறு பிரதேசத்தை சேர்ந்த 18 – 40 வயதிற்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

SHARE