ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் 2,340 கிலோ நிறையுடைய ஹெரோயின், கொக்கையின், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதனோடு தொடர்புடைய குற்றச்சாட்டில் 13,298 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட ஒரு தொகை கொக்கையின் போதைப்பொருள் அழிக்கப்படும் நிகழ்வு நேற்று இடம் பெற்றது. இதன்போதே அவர் ஊடகங்களுக்கு மேற்படி தகவலை தெரிவித்தார்.
இவ்வருடத்தில் கடந்த மார்ச் 28ஆம் திகதி வரையான தகவல்களை மையப்படுத்தியே பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்தார்.