யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய பெண்

171

வீட்டுக்குள் புகுந்த பெண் ஒருவரும் அவரது மகனும் அங்கு வசிக்கும் சகோதரிகளான மூன்று இளம் பெண்களைக் கடுமையாகத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் யாழ். உடும்பிராய் தெற்கு யோகபுரத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்குள்ளான மூன்று பெண்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவர் மயக்கமடைந்து சுய நினைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அயலவர்கள் இவர்களை மீட்டு கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பியூலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.

SHARE