திருகோணமலை, குச்சவெளி பகுதியில் இருவர் கைது

189

திருகோணமலை, குச்சவெளி பகுதியில் திருட்டு மின்சாரம் பெற்ற இருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குச்சவெளி பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லரப்பு பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 56 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE