வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

152

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர்.

தாதிய, வைத்திய சேவை உதவியாளர்கள் மற்றும் குறை நிரப்பு வைத்திய சேவையினர் ஒன்றாக இணைந்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இன்று காலை தொடங்கம் 24 மணிநேரத்திற்கு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடுபூராகவும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இவ் இணைந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

6 வருடங்களாக தர உயர்வுகளை பெறவும், தாதிய பட்டதாரிகள் சம்பளத்தை உத்தியோகரீதியான தொழிலுக்குரிய சம்பள அளவுத்திட்டத்தை பெறவும், சம்பள முரண்பாட்டை தீர்க்க ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையினை அமுல்படுத்தவும், இழந்த பதவி நிலையை மீளப்பெறல், ரூபாய் 3000 ஆகவுள்ள விஷேட படியை ரூபாய் 6000ஆக உயர்த்துதல், மேலதிக நேர கொடுப்பனவை 1/80 ஆக பெறவும், மீதி மேலதிக நேர கொடுப்பனவை பெற்றுக்கொள்ளல், சுகாதார நிர்வாக சேவையினை உருவாக்குதல் ஆகிய கோரிக்கையினை இவர்கள் முன்வைத்துள்ளனர்.

இதன் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் மற்றும் இரத்த சோதனை பிரிவு எனபவற்றின் சேவைகளில் தாதிய உத்தியோகத்தர்கள் இன்மையினால் நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அத்துடன் நோயாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அவசர சிகிச்சை பிரிவில் மாத்திரம் தாதிய உத்தியோகத்தர்கள் பணியினை முன்னெடுத்து வருகின்றனர்.

  

 

 

 

 

 

 

 

 

 

SHARE