சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, விசேட போக்குவரத்து சேவைகள்

142

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, விசேட போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 1,350 பஸ் வண்டிகள் சாதாரண கால அட்டவணைப்படி இயங்கும் என்று போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.ரி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 22 ம் திகதி வரை 1,500 மேலதிக பஸ் வண்டிகள் விசேட கால அட்டவணையின் படி சேவையில் ஈடுபடுத்தப்படும்.

இதேவேளை, நாளை மறுதினம் முதல் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

SHARE